கோடை விடுமுறை.. குளு குளுனு இருக்க கொல்லிமலை சுற்றுலா..!
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்ட, மாநில மக்களிடமும் மிகவும் பிரபலமானது.
எந்த காலநிலையிலும் நல்ல இதமான சூழலைக் கொண்டு இருப்பதால், விடுமுறை நாட்களில் கொல்லிமலையில் குவியும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர். மருத்துவ குணம் வாய்ந்த பல மூலிகை செடிகள் இந்த அதிசய மலையில் நிறைந்துள்ளது.
சுமார் 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து இந்த மலைக்கு செல்லும் பயணம் மிகவும் ரம்மியமானதாக இருக்கும்.
கொல்லி மலை என்றாலே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமானது. மேலும் சித்தர் குகைகள், படகு இல்லம், தோட்டங்கள் போன்றவை இங்கு முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன.
கொல்லி மலையில் அமைந்துள்ள சீக்குபாறை வியூ பாயின்ட் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கிருந்து மொத்த ஊரின் அழகை காணலாம். அழகிய மலைத்தொடர்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்கு காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
இங்கு அதிகாலை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் காட்சிகள் மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றன. கொல்லிமலைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.
சீக்குபாறை வியூபாயின்ட்டில் இருந்து கொல்லி மலையின் கீழ் அடிவாரப்பகுதியில் அமைந்து இருக்கும் காரவள்ளி, சேந்தமங்கலம் மேலும் பல ஊர்களின் அழகிய தோற்றத்தை கண்டு ரசிக்கலாம்.
கொல்லிமலை சுற்றுலாத்தலம் புகைப்பட பிரியர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும்.