இந்த 7 பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாதாம்... ஏன் தெரியுமா?
Photo: MetaAI
ஆப்பிளில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே ஆப்பிளை சாப்பிட்டதும் தண்ணீர் குடிப்பதனால் வயிற்றில் வீக்கம் உண்டாவதோடு மந்தமான உணர்வு ஏற்படும்
Photo: MetaAI
ஆரஞ்சு பழத்தில் அமிலத்தன்மை அதிகமாக உள்ளது. எனவே ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதனால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
Photo: MetaAI
அன்னாசி பழத்தில் ப்ரோமிலைன் என்ற என்சைம் உள்ளது. அன்னாசி பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
Photo: MetaAI
கொய்யா பழத்தில் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடும் பழக்கம் நம்மிடையே பலருக்கும் உண்டு. அப்படி சாப்பிட்டால் உடனே தாகம் எடுக்கும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
Photo: MetaAI
அதேபோல் மாம்பழம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனென்றால் மாம்பழத்தில் உள்ள என்ஸைம்கள் செரிமான அமைப்பை பாதிக்கக்கூடும்.
Photo: MetaAI
வாழைப்பழத்தில் பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள நிறைந்துள்ளன. எனவே வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Photo: MetaAI
பப்பாளிப் பழத்தில் பாப்பைன் என்ற என்ஸைம் உள்ளது. எனவே பப்பாளி பழத்தை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் வயிறு மந்தமாகுவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்திவிடும்.