திருப்பத்தூரில் 2-ந் தேதி முதல் இலக்கியத் திருவிழா, புத்தக கண்காட்சி

திருப்பத்தூரில் 2-ந் தேதி முதல் இலக்கியத் திருவிழா, புத்தக கண்காட்சி நடக்கிறது.

Update: 2022-03-29 18:25 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தூயநெஞ்சக் கல்லூரியில் வருகிற 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை இலக்கியத் திருவிழா மற்றும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த திருவிழா, புத்தக கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் சிறப்பு விருந்தினர்கள், கவிஞர்கள், உரையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் பங்குபெற உள்ளனர்,
இலக்கியத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தாசில்தார் சிவபிரகாசம், அரங்குகள் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்