புதுமையான கதைகளில் நடிக்க விரும்பும் சமந்தா


புதுமையான கதைகளில் நடிக்க விரும்பும் சமந்தா
x
தினத்தந்தி 23 Nov 2021 9:19 AM GMT (Updated: 23 Nov 2021 9:19 AM GMT)

கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். அப்போது தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

விழாவில் சமந்தா பேசும்போது, ‘‘நடிகை அல்லது ஒரு நடிகர் எப்போதுமே ஒரே விதமான கதாபாத்திரங்கள் செய்யவேண்டுமென எதிர்பார்க்க மாட்டார்கள். சவால் நிறைந்த புதிய கதாபாத்திரங்கள் நல்ல கதையோடு கூடிய சினிமாக்ளுக்காக காத்திருப்பார்கள். தெலுங்கு சினிமா துறையும், ஐதராபாத்தும் எனது பிறந்த வீடு மாதிரி ஆகிவிட்டது. வட இந்திய சினிமா துறைக்கும், தென்னிந்திய திரைப்பட துறைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 

சினிமா. ஓ.டி.டி. இவற்றில் எது சிறந்தது என சொல்ல முடியாது. ஆனாலும் இருட்டு அறையில் எந்த இடையூறும் இல்லாமல் தியேட்டரில் படம் பார்ப்பதோடு ஒப்பிடும்போது வீட்டில் டி.வி.யில் அனேக இடையூறுகளுக்கு இடையே பார்க்கும் ஓ.டி.டி. தளங்களில் ரசிகர்களை அசையாமல் உட்கார வைத்து அவர்களின் பாராட்டை பெறுவது கஷ்டம். ஆனாலும் நடிகர், நடிகைகளுக்கு ஓ.டி.டி. ஒரு வாய்ப்பும் கூட. நான் புதுமையான கதைகளுக்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். அப்படி காத்திருக்கும்போதுதான் பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது” என்றார்.


Next Story