நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக்கொண்டு துவங்கியது திரை பயணம் - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி


நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக்கொண்டு துவங்கியது திரை பயணம் - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Feb 2022 9:26 AM GMT (Updated: 3 Feb 2022 9:26 AM GMT)

என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சென்னை,

தனியார் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி, வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரை நடிகராக இன்று 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து,

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள்...

நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக்கொண்டு துவங்கியது இந்த பயணம். 

இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்து கூட பார்த்திராத நிஜன்.

இந்த தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த இயக்குனர்களுக்கும், தன்னோடு சேர்ந்து என்னையும் மிளிரச்செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பத்திரிக்கை, தொலைக்காட்சி இணையதள நண்பர்களுக்கும் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லாவற்றிகும் மேலாக,

என் தாய்தமிழுக்கும் என்னை மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும் என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி- தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள்..

எப்போதும் நாப் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே...!

என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும் உங்கள் சிவகார்த்திகேயன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story