நடுக்காட்டில் முரட்டு நாய்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட ஆண்ட்ரியா


நடுக்காட்டில் முரட்டு நாய்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட ஆண்ட்ரியா
x
தினத்தந்தி 8 April 2022 10:12 AM GMT (Updated: 8 April 2022 10:12 AM GMT)

‘நோ என்ட்ரி’ படத்தில் நடுக்காட்டில் முரட்டு நாய்களுக்கு மத்தியில் ஆண்ட்ரியா மாட்டிக்கொண்ட காட்சி, திகிலாக படமாக்கப்பட்டு இருக்கிறது.

‘‘மே காலயாவை உங்களுக்கு தெரியுமா? அதன் காடுகளையும், மலைகளையும், மலைகளுக்கு நடுவில் புதைந்து கிடக்கும் குகைகளையும் காணக் கண்கோடி வேண்டும். இயற்கை தந்த இன்னோரு பொக்கிஷம், அதிசய பாலம். நதி மேல் பாலம், சிமெண்டால் கட்டப்பட்ட பாலம், இரும்பால் கட்டப்பட்ட பாலம், கம்பிகளால் கட்டப்பட்ட பாலம், மரத்தால் கட்டப்பட்ட பாலம், மூங்கில்களால் கட்டப்பட்ட பாலம் போன்றவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஆனால் மேகாலயாவில் 3,200 படிகளுக்கு கீழே, சில மலைகளுக்கு நடுவே , பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் நதிக்கு மேலே கட்டப்பட்ட அதிசய பாலத்தை ‘நோ என்ட்ரி’ படத்தில் பார்க்கலாம். இரண்டு மரங்களின் வேர்களை பின்னி, பழங்காலத்தில் வாழ்ந்த பாரம்பரிய மனிதர்கள் இந்த பாலத்தை கட்டி இருக்கிறார்கள். இந்த அதிசயத்தை ‘நோ என்ட்ரி’ படத்தில் பார்க்கலாம்’’ என்கிறார், டைரக்டர் ஆர்.அழகுகார்த்திக். இவர் மேலும் கூறுகிறார்:- 

‘‘காட்டுக்கு நடுவே கட்டப்பட்ட மூங்கில் வீட்டில், முரட்டு நாய்களுக்கு மத்தியில் ஆண்ட்ரியா மாட்டிக்கொண்ட காட்சி, திகிலாக படமாக்கப்பட்டு இருக்கிறது. அந்த நாய்களிடம் இருந்து ஆண்ட்ரியா தப்பி ஓடுவதும், ஆண்ட்ரியாவுக்கும், நாய்களுக்கும் இடையே நடக்கும் சண்டை காட்சியும் பரபரப்பாக படமாக்கப்பட்டது.’’

Next Story