மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 30 Nov 2021 10:01 AM GMT (Updated: 2 Dec 2021 11:29 AM GMT)

இரணியல் அருகே மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திங்கள்சந்தை, 

இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு புதுக்காடுவெட்டுவிளை சேர்ந்தவர் தேவதாசன். இவரது மகன் ஜூலியன் ஹட்சிலி தாஸ் (வயது 37). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை இவர், தனது மோட்டார் சைக்கிளை இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி விட்டு திருவனந்தபுரம் சென்றார். இரவு திரும்பி வந்து பார்த்தபோது, ரெயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. பின்னர், இதுகுறித்து ஜூலியன் ஹட்சிலி தாஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story