தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
x
தினத்தந்தி 2 Dec 2021 4:21 PM GMT (Updated: 2 Dec 2021 4:21 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 499-ஆக உள்ளது. நேற்று 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 56 ஆயிரத்து 54 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு ெகாரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

Next Story