பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு 4-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு


பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு 4-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2021 9:56 AM GMT (Updated: 22 Dec 2021 9:56 AM GMT)

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு ஜனவரி மாதம் 4-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளி உள்ளது. பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது இதுவரை 8 போக்சோ மற்றும் 2 பெண்கள் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை 2 போக்சோ வழக்குகளில் நேற்று செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story