கார்களை வாடகைக்கு எடுத்து லட்சக்கணக்கில் மோசடி


கார்களை வாடகைக்கு எடுத்து லட்சக்கணக்கில் மோசடி
x
தினத்தந்தி 23 Dec 2021 9:30 AM GMT (Updated: 23 Dec 2021 9:30 AM GMT)

கார்களை வாடகைக்கு எடுத்து லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக இவர் மீது திருவான்மியூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40). இவர் குறைந்த வாடகைக்கு கார்களை அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து வாங்கி, அவற்றை பயணிகளுக்கு அதிக வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். கார் உரிமையாளர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் தருவதாக ஒப்பந்தம் போட்டிருந்ததாக தெரிகிறது.

ஆனால் ஒப்பந்தப்படி கார் உரிமையாளர்களுக்கு பணத்தை கொடுக்காமல் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக இவர் மீது சென்னை திருவான்மியூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கார்கள் மீட்கப்பட்டது.


Next Story