திருவள்ளூர் அருகே கஞ்சா விற்பதை தட்டிக்கேட்ட கடைக்காரருக்கு அடி-உதை - வாலிபர் கைது


திருவள்ளூர் அருகே கஞ்சா விற்பதை தட்டிக்கேட்ட கடைக்காரருக்கு அடி-உதை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Dec 2021 9:45 AM GMT (Updated: 26 Dec 2021 9:45 AM GMT)

திருவள்ளூர் அருகே கஞ்சா விற்பதை தட்டிக்கேட்ட கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ஜவஹர் நகர் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 36). இவர் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதியில் காயலான் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் எம்.ஜி.ஆர். நகர் சரஸ்வதி தெருவை சேர்ந்த குல்லா என்கிற பிரவீன் (22) என்பவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மகேஸ்வரன் தட்டி கேட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த பிரவீன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மகேஸ்வரனை கொலை செய்து விடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story