திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் ரூ.30 லட்சம் பொருட்கள் திருட்டு - 4 பேர் கைது


திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் ரூ.30 லட்சம் பொருட்கள் திருட்டு - 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 Dec 2021 9:51 AM GMT (Updated: 26 Dec 2021 9:51 AM GMT)

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் ரூ.30 லட்சம் பொருட்கள் திருடப்பட்டது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு சொந்தமான தளவாட பொருட்கள் தொழிற்சாலைக்கு வெளியே குவித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள தளவாட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து அந்த தொழிற்சாலையின் நிர்வாகி மனோஜ்குமார் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பொருட்களை திருடியது திருவள்ளூரை அடுத்த தண்டலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சத்யா (வயது 33), பாண்டியன் (27), புருஷோத்தமன் (28), வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த முத்து (49) என்பது தெரியவந்தது.

போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story