மதுரவாயல் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரவாயல் அருகே பட்டதாரி பெண் உடல்நலக்குறைவால் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரவாயல் அடுத்த துண்டலம், திரு.வி.க.தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 27). பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தனது அறையில் தூங்க சென்ற அவர், காலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பாண்டீஸ்வரி தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன பாண்டீஸ்வரி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாண்டீஸ்வரி அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் மனவேதனையில் இருந்த அவர், தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story