கர்நாடகத்தில் புதிதாக 4,246 பேருக்கு கொரோனா..!!! பெங்களூருவில் பாதிப்பு 3,500-ஐ தாண்டியது


கர்நாடகத்தில் புதிதாக 4,246 பேருக்கு கொரோனா..!!! பெங்களூருவில் பாதிப்பு 3,500-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 5 Jan 2022 10:19 PM GMT (Updated: 5 Jan 2022 10:19 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 4,246 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூருவில் ஒரு நாள் பாதிப்பு 3,500-ஐ தாண்டியுள்ளது.

பெங்களுரு:

பெங்களூருவில் 3,605 பேர் பாதிப்பு

  கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 4 ஆயிரத்து 246 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூருவில் மட்டும் 3 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 30 லட்சத்து 17 ஆயிரத்து 572 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் இறந்தனர். இதுவரை 38 ஆயிரத்து 357 பேர் இறந்து உள்ளனர். பெங்களூருவில் மட்டும் நேற்று 2 பேர் இறந்தனர். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

  தட்சிண கன்னடாவில் 111 பேர், உடுப்பியில் 88 பேர், மைசூருவில் 59 பேர், துமகூருவில் 43 பேர், மண்டியாவில் 36 பேர், பல்லாரியில் 34 பேர், பெலகாவியில் 31 பேர், கலபுரகியில் 28 பேர், தார்வாரில் 26 பேர், கோலாரில் 24 பேர், சிவமொக்காவில் 22 பேர், ஹாசன், குடகில் தலா 20 பேர், பெங்களூரு புறநகரில் 19 பேர், உத்தர கன்னடாவில் 17 பேர், விஜயாப்புராவில் 14 பேர்.

4 மாவட்டங்களில்...

  சிக்கமகளூருவில் 12 பேர், சிக்பள்ளாப்பூரில் 8 பேர், பாகல்கோட்டை, சித்ரதுர்காவில் தலா 6 பேர், கதக்கில் 5 பேர், ராமநகரில் 4 பேர், பீதர், தாவணகெரேயில் தலா 3 பேர், சாம்ராஜ்நகரில் 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. நேற்று 362 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 29 லட்சத்து 61 ஆயிரத்து 772 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 17 ஆயிரத்து 414 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

  பெங்களூருவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நகரவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Next Story