விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 8 Jan 2022 9:06 PM GMT (Updated: 8 Jan 2022 9:06 PM GMT)

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

புதுக்கடை:
தேங்காப்பட்டணம் அருகே விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பிள்ளை (வயது 67). இவர் முந்திரி ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை  அவரது மகன் கண்டித்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து முத்துப்பிள்ளை வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். 
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story