மின்விளக்கு சீரமைப்பு
தினத்தந்தி 16 Jan 2022 10:07 AM GMT (Updated: 16 Jan 2022 10:07 AM GMT)
Text Sizeமின்விளக்கு சீரமைப்பு
காங்கேயம் டவுன் பஸ் நிலையத்தில் மிகப்பெரிய அளவில் உயரமின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்குகள் பழுதடைந்ததால் பஸ் நிலைய வளாகத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பயணிகள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். மின் விளக்கை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் விளக்கை சரி செய்தனர். நகராட்சி நிர்வாகத்தினரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire