தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 1,502 பேருக்கு கொரோனா


தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 1,502 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Jan 2022 10:18 PM GMT (Updated: 25 Jan 2022 10:18 PM GMT)

தென்காசி, நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 1,502 பேருக்கு கொரோனா

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 662 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 462-ஆக உயர்ந்துள்ளது. 53 ஆயிரத்து 715 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றும் 437 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தென்காசி மாவட்டத்தில் 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 452- ஆக உயர்ந்துள்ளது. 28 ஆயிரத்து 31 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றும் 126 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆயிரத்து 934 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று 396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரத்து 480-ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 318 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். மொத்தம் 59 ஆயிரத்து 636 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஆயிரத்து 412 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story