பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ராயப்பேட்டை முத்தையா தெருவை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் ஆன்-லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். புகழேந்தி 8 வருடங்களுக்கு முன்பு உமா மகேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
உமா மகேஸ்வரி சிறுவயதில் இருந்தே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் பொங்கல் விழாவையொட்டி உமா மகேஸ்வரி, லாயிட்ஸ்காலனியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து பார்த்த அவரது குடும்பத்தினர் தூக்கில் தொங்கிய நிலையில் உமாமகேஸ்வரி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி விரைந்து வந்த ஐஸ்-அவுஸ் போலீசார் உமாமகேஸ்வரியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உமாமகேஸ்வரி உடல்நல குறைவால் தான் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story