கோத்தகிரியில் குடிபோதையில் தவறி விழுந்தவர் சாவு
கோத்தகிரியில் குடிபோதையில் தவறி விழுந்தவர் இறந்தார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை காமராஜ் நகரைச் சேர்ந்த சவுடப்பன். இவரது மகன் குமரேசன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் கோத்தகிரி கடைவீதி பகுதியில் உழவர் சந்தைக்கு அருகே டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறியதில் அவர் உழவர் சந்தைக்கு அருகே செல்லும் போது தவறி பனிப்பொழிவில் நிலத்தில் விழுந்துள்ளார். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் குமரேசன் கீழே கிடப்பதைக் கண்டு அவரது குடும்பத்தாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அவர் இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன குமரேசனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி லதா (44) கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story