தாம்பரம் மாநகராட்சியில் 268 பேர் வேட்புமனு தாக்கல்
தாம்பரம் மாநகராட்சியில் 268 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர். சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளுக்கான தேர்தலில் போட்டியிட இதுவரை 141 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒரே நாளில் 268 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 409 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
அதேபோல் ஆவடி மாநகராட்சியில் நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, சுயச்சைகள் என 151 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் மொத்தம் 191 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் மேலும் அதிகமானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story