சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2022 10:08 AM GMT (Updated: 18 Feb 2022 10:08 AM GMT)

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை, 

பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

* சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 7.27, 11.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9.30, 1.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* காஞ்சீபுரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 9.15 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 10.30 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2.20 மணிக்கும் இன்று புறப்படும் மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

* காஞ்சீபுரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 11.05 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2.55 மணிக்கும் இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story