போலி கையெழுத்து மூலம் மோசடியில் கட்டுமான நிறுவன பங்குதாரர் கைது


போலி கையெழுத்து மூலம் மோசடியில் கட்டுமான நிறுவன பங்குதாரர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2022 9:36 AM GMT (Updated: 25 Feb 2022 9:36 AM GMT)

போலி கையெழுத்து மூலம் ரூ.1 கோடி மோசடியில் கட்டுமான நிறுவன பங்குதாரர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருமுல்லைவாயல் பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் நியூடெக் டிசைன் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பாஸ்கர்(வயது 39) என்பவரும் பங்குதாரர். அந்த நிறுவனத்தில் காமேஷ் என்பவர் ஊழியராக வேலை செய்தார். தனது கையெழுத்தை போலியாக வங்கி காசோலைகளில் போட்டு, பங்குதாரர் பாஸ்கரும், ஊழியர் காமேசும் இணைந்து கம்பெனி பணம் ரூ.1 கோடியை சுருட்டி உள்ளதாக ஹரிகிருஷ்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். புகாரில் உண்மை இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் புகார் கூறப்பட்ட பாஸ்கர் மற்றும் காமேஷ் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.


Next Story