நீடாமங்கலத்தில் இருந்து ஈரோடு, கோவைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


நீடாமங்கலத்தில் இருந்து ஈரோடு, கோவைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x
தினத்தந்தி 1 March 2022 6:30 PM GMT (Updated: 1 March 2022 11:17 AM GMT)

நீடாமங்கலத்தில் இருந்து ஈரோடு, கோவைக்கு நெல் அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து ஈரோடு மற்றும் கோவைக்கு தலா ஆயிரம் டன் வீதம் 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதையொட்டி மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் அடுக்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து நெல் அரவைக்காக ஈரோடு மற்றும் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Next Story