திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் வசூல்
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் வசூல் கிடைத்தது.
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்படும்.
அதன்படி கடந்த மாதம் 27-ந்தேதி திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைப்பெற்றது. இதற்கு கோவில் செயல் அலுவலர் பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். உதவி ஆணையர் ரமணி முன்னிலை வகித்தார். இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 12 லட்சத்து 36 ஆயிரத்து 265 ரூபாய் கிடைத்தது. மேலும் 130 பவுன் தங்கம், வெள்ளி 13 ஆயிரத்து 200 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story