ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சின் நகையை திருடிய வாலிபர் கைது


ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சின் நகையை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 March 2022 10:20 AM GMT (Updated: 20 March 2022 10:20 AM GMT)

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சின் நகையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை வில்லிவாக்கம் வைகை தெருவை சேர்ந்தவர் சுப்பு லட்சுமி (வயது 35). இவர், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரகவியல் வார்டில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12-ந்தேதி இவருடைய 2 பவுன் சங்கிலி திருட்டுபோனது.

இதுபற்றி சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு ெசய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ைவத்து மயிலாப்பூர் நாட்டான் தோட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story