தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 March 2022 4:07 PM GMT (Updated: 25 March 2022 4:07 PM GMT)

நாகூரில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகூர்:
 நாகூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு நாகூர்- நாகை சாலையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது நாகூர் புதிய பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டு இருந்த நபாிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்,  நாகூர் பாலக்காடு பகுதாயம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ஞானசேகரன் (வயது23) என்பதும், இவர் மீது நாகூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளதும், அவர் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர்.

Next Story