தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி


தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 1 April 2022 4:24 PM GMT (Updated: 1 April 2022 4:24 PM GMT)

வாய்மேடு அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

வாய்மேடு:
வாய்மேடு அரசு நடுநிலைப்பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சார்லஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராகுல், ஜெயக்குமார் ஆகியோர் தீத்தடுப்பு ஒத்திகையை செய்து காண்பித்தனர். இதில் பள்ளி ஆசிரியைகள், மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மணிமொழி நன்றி தெரிவித்தார்.

Next Story