பாலாறு அணைக்கட்டில் மீன்பிடித்த தொழிலாளி நீரில் மூழ்கி பலி


பாலாறு அணைக்கட்டில் மீன்பிடித்த தொழிலாளி நீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 3 April 2022 4:28 PM GMT (Updated: 3 April 2022 4:28 PM GMT)

பாலாறு அணைக்கட்டில் மீன்பிடித்த தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.

வாலாஜா

வாலாஜா பாலாறு அணைக்கட்டு இலங்கை தமிழர் முகாமில் வசித்தவர் முருகையா (வயது 58) கூலி தொழிலாளி. இவர் அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது  திடீரென தண்ணீரில் தவறி விழுந்து தத்தளித்தபடி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் வ ாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story