நீடாமங்கலத்தில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு


நீடாமங்கலத்தில் இருந்து திருப்பூருக்கு  அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 5 April 2022 6:45 PM GMT (Updated: 5 April 2022 4:07 PM GMT)

நீடாமங்கலத்தில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலம்:-

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதையொட்டி நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் இடையர் நத்தம், தெற்குநத்தம், அசேஷம் ஆகிய திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனை தொடர்ந்து நெல் அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story