உதவியாளர் துணையுடன் தேர்வு எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி


உதவியாளர் துணையுடன் தேர்வு எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி
x
தினத்தந்தி 12 April 2022 4:03 PM GMT (Updated: 12 April 2022 6:47 PM GMT)

9-ம் வகுப்பு மாணவியின் உதவியுடன் தேர்வு எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா லாயிலா கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த தனியார் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த தன்வி என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். 

நேற்று முன்தினம் அவர் தனது தாய் மம்தாவுடன் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். ஸ்கூட்டரை மம்தா ஓட்டினார். தன்வி பின்னால் அமர்ந்திருந்தார். உஜிரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தன்வியின் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் தாறுமாறாக ஓடி சாலையில் உருண்டு விபத்துக்கு உள்ளானது. 

இதில் தன்வி காயம் அடைந்தார். பின்னர் அவருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் மாணவி தன்வி, அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி உதவியுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார். கேள்விகளுக்கு தன்வி பதில் சொல்ல, 9-ம் வகுப்பு மாணவிகளை விடைத்தாளில் பதிலை எழுதினார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story