லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 20 பேர் காயம்


லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 20 பேர் காயம்
x
தினத்தந்தி 22 April 2022 9:55 AM GMT (Updated: 22 April 2022 9:55 AM GMT)

காஞ்சீபுரம் தாமல் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.

காஞ்சீபுரம், 

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் 35 பேரை ராணிபேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏற்றிகொண்டு பஸ் வந்து கொண்டிருந்தது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக காஞ்சீபுரம் தாமல் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சை முந்தி முன்னால் சென்ற லாரியின் பின்னால் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சில் இருந்த 20 பேர் காயம் அடைந்தனர். 19 பேர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கால் முறிவு ஏற்பட்ட ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story