மின்கசிவால் குடிசை எரிந்து சேதம்


மின்கசிவால் குடிசை எரிந்து சேதம்
x
தினத்தந்தி 22 April 2022 10:23 AM GMT (Updated: 22 April 2022 10:23 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டம் மின்கசிவால் குடிசை எரிந்து சேதம் அடைந்தது.

மதுராந்தகம், 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சூனாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட இல்லீடு கிராமம் ஒத்தவாடை தெரு பஞ்சநாதன் ஷகிலா என்பவரது குடிசை மின்கசிவு காரணமாக முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. அங்கு இருந்த ரூ.50 ஆயிரம், 2 பவுன் நகை, டி.வி., மிக்சி, கிரைண்டர் மற்றும் அனைத்து உபகரண பொருட்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வீட்டின் பட்டா உள்ளிட்ட அனைத்து முக்கிய பொருட்களும் எரிந்து விட்டது.

இதையறிந்த சூனாம்பேடு முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பஞ்சநாதன் ஷகிலாவுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் ரூ.15 ஆயிரம் நிதி வழங்கினார். அவர்களுடன் துணைத்தலைவர் விஜயா தெய்வசிகாமணி உடன் இருந்தார்.

Next Story