நன்னிலம்:-
பேரளத்தில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதை முன்னிட்டு நன்னிலம், குடவாசல், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் அடுக்கி வைத்தனர். அதன் பின்னர் நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருப்பூர் புறப்பட்டு சென்றது.