நாசிக் அருகே மரத்தின் மீது கார் மோதல்- 4 பேர் பலி


மரத்தின் மீது  கார் மோதி 4 பேர் பலி
x
மரத்தின் மீது கார் மோதி 4 பேர் பலி
தினத்தந்தி 12 May 2022 10:29 AM GMT (Updated: 12 May 2022 10:29 AM GMT)

நாசிக் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் 4 பேர் பலியாகினர்.

நாசிக், 
  நாசிக் அருகே மரத்தின் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் பலியானார்கள். 
பயங்கர விபத்து
   நாசிக் அருகே யோவ்லா பகுதியில் இருந்து கார் ஒன்று மான்மாட் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரில் தவுபிக் சேக் (வயது25), பிரவின் சாகேத் (23), தினேஷ் பாலேராவ் (32), கோகுல் வால்மீக் (38), அஜய் வாங்கடே (23) ஆகிய 5 பேர் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை 1 மணி அளவில் மான்மாட் டவுண் அருகே உள்ள நெடுஞ்சாலையில் வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
4 பேர் பலி
  இந்த பயங்கர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது, இதில் இடிபாடுகளில் சிக்கி காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்தில் காயமடைந்த அஜய் வாங்கடேவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
  பின்னர் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---

Next Story