அக்னீஸ்வரர் கோவிலில் பால்காவடி திருவிழா
நாகூர் அருகே தெத்தி அக்னீஸ்வரர் கோவிலில் பால்காவடி திருவிழா நடந்தது.
நாகூர்:-
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த தெத்தியில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பால்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பால்காவடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீதனபால் சிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், சிலம்பாட்டத்துடன் காவடி ஊர்வலம் தொடங்கியது. பல்வேறு வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் நாகை நெல்லுகடை மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பத்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story