17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது


17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 7 April 2022 9:22 AM GMT (Updated: 7 April 2022 9:22 AM GMT)

மதுரையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 42). கூலி தொழிலாளி. இவர் திருமணமான நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் முனியாண்டி, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.அது தொடர்பாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.

Next Story