காலவரையற்ற போராட்டத்தில் இறங்கிய ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள்....!


காலவரையற்ற போராட்டத்தில் இறங்கிய ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள்....!
x
தினத்தந்தி 21 April 2022 10:30 AM GMT (Updated: 21 April 2022 10:20 AM GMT)

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடந்தாண்டில் தமிழக அரசு ஏற்றது. இந்நிலையில் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அரசு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளுக்கு நிகராக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர்களுக்கும் அரசு கல்விக் கட்டணத்தை வசூலிக்க கோரி கடந்த 11 தினங்களாக கல்லூரி வளாகத்தில் மாலையில் மாணவர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் இன்று காலை 2-ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவ-மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் வகுப்புகளைப் புறக்கணித்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Next Story