மின்சார ரயில் விபத்து; பயணிகள் பதற்றத்துடன் ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியானது


மின்சார ரயில் விபத்து; பயணிகள் பதற்றத்துடன் ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியானது
x
தினத்தந்தி 24 April 2022 4:15 PM GMT (Updated: 24 April 2022 4:15 PM GMT)

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை,

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த புறநகர் மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளானது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரெயில் பெட்டிகள் சேதம் அடைந்தன.

பணிமனையில் இருந்து சென்ற ரெயில் என்பதால் ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்தில் ரெயிலின் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார். 

இந்த நிலையில் ரெயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரெயில் நிலையத்திற்குள் மிகவும் குறைவான வேகத்தில் ரெயில் நுழைந்த போது, ரெயிலில் ஏறுவதற்காக வழக்கம் போல பயணிகள் நடைமேடையில் நின்று கொண்டிக்கின்றனர். 

திடீரென ரெயில் நடைமேடையில் மோதி நின்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அங்கிருந்து பதற்றத்துடன் ஓடிச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. 

Next Story