சென்னையில் விடாமல் பெய்து வரும் மழை..!


சென்னையில் விடாமல் பெய்து வரும் மழை..!
x
தினத்தந்தி 26 Nov 2021 10:20 AM GMT (Updated: 26 Nov 2021 10:20 AM GMT)

சென்னையில் விடாமல் பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னை,

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்  அடுத்த 2 தினங்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.

இந்தநிலையில்,  சென்னையில் ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, மீனம்பாக்கம், பரங்கிமலை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், மணலி  ராயபுரம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் , கோடம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், வேளச்சேரி, குரோம்பேட்டை, அசோக்நகர், சூளைமேடு, வண்டலுர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல்,  அசோக்நகர்,  பெரம்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் விடாமல் பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்ந்து  பெய்து வரும் மழையால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story