“ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பாதுகாப்பு படைகளில் சேரலாம்” - உக்ரைன் பாதுகாப்பு மந்திரி அழைப்பு


“ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பாதுகாப்பு படைகளில் சேரலாம்” - உக்ரைன் பாதுகாப்பு மந்திரி அழைப்பு
x
தினத்தந்தி 24 Feb 2022 9:47 AM GMT (Updated: 24 Feb 2022 9:47 AM GMT)

ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பிராந்திய பாதுகாப்பு படைகளில் சேரலாம் என உக்ரைன் பாதுகாப்பு மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.

கைவ்,

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ரஷிய படைகளில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு படைகளில் சேர்வதற்கு அந்நாட்டு மக்களுக்கு உக்ரைனின் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி ஆயுதம் ஏந்த தயாராக இருப்பவர்கள் பிராந்திய பாதுகாப்பு படைகளில் சேரலாம் என அவர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா முழு அளவிலான போரை துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து. 

Next Story