ஐ.எஸ்.எல்.கால்பந்து : மும்பை அணி வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின . .
கோவா
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின
.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை அணியில் ஹசிங்கோ 3 -வது நிமிடத்திலும் ,பிபின் சிங்க் 17 வது நிமிடத்திலும் , இகோர் அன்குளோ 24 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர் .இதனால் மும்பை அணி 3-0 என முன்னிலை பெற்றது .
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜாம்ஷெட்பூர் அணியில் கோமல் தட்டால் 48 வது நிமிடத்திலும் ,ஏலி சபியா 55 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர் .
இதனை தொடர்ந்து மும்பை அணியின் யகோர் கட்டாடா 70 - வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததால் மும்பை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story