ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் -மும்பை அணிகள் மோதின.
கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் -மும்பை அணிகள் மோதின
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் 9 வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கிரேக் ஸ்டீவர்ட் ஒரு கோல் அடித்தார்,தொடர்ந்து 30 வது நிமிடத்தில் ரித்விக் தாஸ் ஒரு கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்க மும்பை அணியின் ராகுல் பிகே 57 வது நிமிடத்தில் மற்றும் டியாகோ 86 வது நிமிடத்தில் பெனால்டி உதவியுடன் கோல் அடித்தார். .இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது .
90 நிமிடம் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நிமிடத்தில் பெனால்டி உதவியுடன் ஜாம்ஷெட்பூர் அணியின் கிரேக் ஸ்டீவர்ட் ஒரு கோல் அடித்தார்.இதனால் ஜாம்ஷெட்பூர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
Related Tags :
Next Story