<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>dailythanthi</title><link>https://www.dailythanthi.com</link><description>Tamil News Today (தமிழ் செய்திகள்): Stay informed with the latest Tamil news from the #1 online Tamil news portal and daily newspaper. Get real-time updates on Tamil Nadu, India, and global news across categories like politics, entertainment, business, sports, spirituality, and more—all in one place in Tamil. | செய்திகளை தமிழில் உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் இந்தியா, தமிழ்நாடு, மாவட்ட செய்திகள், வர்த்தகம், சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட செய்திகள் இங்கே தெரிந்து கொள்ளலாம்!</description><atom:link href="https://www.dailythanthi.com/stories.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><language>ta-in</language><lastBuildDate>Fri, 21 Aug 2026 11:16:32 +0000</lastBuildDate><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><item><title>முகத்தில் தேனீக்களுடன் 5 மணி நேரம் இருந்து நெல்லை வாலிபர் சாதனை</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-youth-sets-record-with-bees-on-face-for-5-hours</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-youth-sets-record-with-bees-on-face-for-5-hours#comments</comments><guid isPermaLink="false">26df0ad3-61ff-4574-b736-b333e71d3d8c</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:16:01 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:16:01.266Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,Tirunelveli,Youth,வாலிபர்,record,தேனீக்கள்,சாதனை</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bggp4gno/honeybee.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  இசக்கிமுத்து என்ற முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ முகத்தில் தேனீக்களுடன் 5 மணி நேரம் இருந்து நெல்லை வாலிபர் சாதனை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bggp4gno/honeybee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை, </p><p>நெல்லை மாவட்டத்தை சேர்ந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D">வாலிபர்</a>  இசக்கிமுத்து என்ற முருகன், தனது முகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தேனீக்களை 5 மணி நேரத்திற்கும் மேலாக மொய்க்கவிட்டு, புதிய  சாதனை படைத்துள்ளார். அவரது இந்த துணிச்சலான முயற்சி,  ‘சீனா உலக சாதனை புத்தகம்’  மற்றும் ‘சோழன் உலக சாதனை புத்தகத்தில்’ பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>நெல்லை வாலிபர்</h2><p>நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற முருகன் (வயது 27). இவர் விவசாயம் மற்றும் வேளாண்மை தொடர்பான படிப்பை முடித்தவர் ஆவார். படிப்பை முடித்த பின், அவர் மாற்று பணிகளை தேடி செல்லாமல் முழுநேரமாகத் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">தேனீ வளர்ப்பு</a> தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தற்பொழுது 18-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட தேன் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் இவர், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இலவசமாக தேனீ வளர்ப்பு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.</p><h2>மெய்சிலிர்க்க வைத்த சாதனை</h2><p>இந்த நிலையில், தேனீக்கள் மனித குலத்திற்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த முருகன் முடிவு செய்தார். இதற்காக, அவர் ஒரு வினோதமான சாதனை முயற்சிக்கு திட்டமிட்டார். அதன்படி, நெல்லை மாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களின் முன்னிலையில், முருகன் தனது முகம் மற்றும் தலைப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இந்திய தேனீக்களை மொய்க்கவிட்டார். கண்கள், மூக்கு, வாய் என முகம் தெரியாத அளவுக்கு தேனீக்கள் அவரது முகத்தை முழுமையாக மூடி ஆக்கிரமித்தன.</p><h2>5 மணி நேரம்</h2><p>தேனீக்கள் கடித்தால் கடுமையான வலி மற்றும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற சூழலிலும், முருகன் எதற்கும் அஞ்சாமல், துளியும் பதற்றமின்றி, சிலையை போல அசையாமல் அமர்ந்திருந்தார்.தொடர்ந்து 5 மணி நேரம் 3 நிமிடங்கள் வரை தேனீக்களை தனது முகத்திலேயே அமரவைத்து, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் புதிய <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">சாதனையை</a> படைத்து அசத்தினார். இதற்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஒருவர் படைத்திருந்த சாதனையை இதன் மூலம் முருகன் முறியடித்துள்ளார். </p><h2>சீன புத்தகத்தில் அங்கீகாரம்</h2><p>முருகனின் இந்த அசாத்திய சாதனை முயற்சியானது ‘சீனா உலக சாதனைப் புத்தகம்’  மற்றும் ‘சோழன் உலக சாதனை புத்தகத்தில்’ அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ்களும், விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.</p> <p><strong>இதுகுறித்து சாதனையாளர் முருகன் தெரிவித்ததாவது:-</strong></p><p> "தேனீக்கள் மனிதர்களின் எதிரிகள் அல்ல, அவை நம் நண்பர்கள். தேனீ வளர்ப்பு  என்பது விவசாயிகளுக்கு ஒரு சிறந்த சுயதொழில் வாய்ப்பு ஆகும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஆபத்தான முயற்சியை நான் மேற்கொண்டேன். யாரும் தகுந்த பயிற்சியின்றி இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார். </p><p>முகத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்களுடன் நெல்லை வாலிபர் முருகன் அமைதியாக அமர்ந்திருக்கும் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி, உலக அளவில் வைரலாகி வருகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைப்பாரா? - சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்</title><link>https://www.dailythanthi.com/sports/cricket/will-he-create-new-history-in-test-cricket-joe-root-closing-in-on-sachins-record</link><comments>https://www.dailythanthi.com/sports/cricket/will-he-create-new-history-in-test-cricket-joe-root-closing-in-on-sachins-record#comments</comments><guid isPermaLink="false">4291035e-39dd-4e64-bebf-e3aebad95f24</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:14:11 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:14:11.123Z</atom:updated><atom:author><atom:name>விளையாட்டுச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514347</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட்,டெஸ்ட் கிரிக்கெட்,சச்சின்,Test,Joe Root,ஜோ ரூட்</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/sm2im1if/JO.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சாதனையாளரான இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் நெருங்கி வருகிறார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/sm2im1if/JO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><content:encoded><![CDATA[ <p>லண்டன்,</p><p>டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சாதனையாளரான இந்திய அணியின் முன்னாள் வீரர் <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">சச்சின் </a>டெண்டுல்கரின் சாதனையை, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் நெருங்கி வருகிறார்.</p><h2>15,921 ரன்கள் குவித்த சச்சின்</h2><p>சச்சின் டெண்டுல்கர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 200 போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.</p><p>சச்சினின் இந்த சாதனையை முறியடிக்க தற்போது ஜோ ரூட் வேகமாக முன்னேறி வருகிறார்.</p><h2>166 போட்டிகளில் 14,114 ரன்கள்</h2><p>இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், இதுவரை 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14,114 ரன்கள் குவித்துள்ளார்.</p><p>இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ரூட்டிற்கு இன்னும் 1,807 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.</p><h2>ரசிகர்கள் எதிர்பார்ப்பு</h2><p>இதன் மூலம்  டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சினின் நீண்ட கால சாதனையை ஜோ ரூட் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்காளதேச பிரதமர் இந்தியா வருகை: டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் தீவிரம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bangladesh-prime-ministers-visit-to-india-intensive-preparations-at-rashtrapati-bhavan-in-delhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bangladesh-prime-ministers-visit-to-india-intensive-preparations-at-rashtrapati-bhavan-in-delhi#comments</comments><guid isPermaLink="false">07a06e86-e5fc-4d7c-995d-ad9c6fbd938e</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:13:23 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:13:23.160Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Bangladesh,வங்காளதேசம்</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/g99ne6y7/National-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/g99ne6y7/National-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரை வங்காளதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.</p><p>இதற்கிடையில், டெல்லியில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாட்டில் பங்கேற்க வங்காளதேச பிரதமர் தாரிக் ரகுமான் இந்தியாவிற்கு வருவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தாரிக் ரகுமானின் இந்திய வருகை திட்டமிட்டபடி நடைபெறும் என இந்திய ஜனாதிபதி மாளிகை உறுதி செய்துள்ளது. </p><p>அவரது வருகையை முன்னிட்டு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வங்காளதேச பிரதமரை முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சிக்கான முழு ஒத்திகை நடைபெறவுள்ளதால், வரும் 22-ந்தேதி(நாளை) ஜனாதிபதி மாளிகையின் முன்புற முற்றத்தில் நடைபெறவிருந்த 'காவலர் மாற்றும் நிகழ்ச்சி' (Change of Guard Ceremony) நடைபெறாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>பல நாடுகளிடம் இருந்து குப்பைகளை வாங்கும் வினோத நாடு: எதற்காக தெரியுமா?
</title><link>https://www.dailythanthi.com/news/world/a-strange-country-that-buys-garbage-from-many-countries-do-you-know-why</link><comments>https://www.dailythanthi.com/news/world/a-strange-country-that-buys-garbage-from-many-countries-do-you-know-why#comments</comments><guid isPermaLink="false">9e49f3e9-eb14-432a-86ee-cd4f4d54274e</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:06:54 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:06:54.242Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Garbage,மின் உற்பத்தி,Sweden,சுவீடன்,Power generation,குப்பைகள்</media:keywords><media:content height="410" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/j3vhbhtq/Untitled-1.jpg" width="710"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுவீடனின் மறுசுழற்சி நிறுவனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/j3vhbhtq/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலக செய்திகள் (World News)</category><content:encoded><![CDATA[ <p>சுவீடன்,</p><p>பல நாடுகளில் நாளுக்கு நாள் குப்பைகளின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அதனை கொட்டுவதற்கு இடமில்லாததால் சுவீடன் நாட்டில் குப்பையை இறக்குமதி செய்கின்றனர். ஒரு டன் குப்பைக்கு 43 டாலர் கொடுக்க வேண்டும் என சுவீடன் அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் பல நாடுகள் பணம் கொடுத்து குப்பைகளை சுவீடனுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த குப்பைகளை வைத்து சுவீடன் பெருமளவில் லாபத்தை பார்த்து வருகிறது.</p><h2>சுவீடனின் மறுசுழற்சி பயன்பாடு </h2><p>சுவீடன் நாட்டின் மறுசுழற்சி பயன்பாடு அமைப்பானது உலகத்திலேயே நம்பர் 1 அமைப்பாக இருந்து வருகிறது. இந்த நாட்டில் உள்ள 99 சதவீத குப்பைகளை மறுசுழற்சி செய்கின்றனர். சுவீடனில் 30-க்கும் மேல் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மறுசுழற்சி</a> ஆலைகள் உள்ளன. ஆனால் எரிப்பதற்கு குப்பைகள் இல்லை. இதனால் இங்கிலாந்து, நார்வே போன்ற நாடுகளில் இருந்து குப்பைகளை பெற்று மறுசுழற்சி செய்து அதில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.</p><p>இந்த ஆலை ஆனது, குப்பைகளை அதிக வெப்பத்தில் எரித்து அதிலிருந்து வரும் நீராவியின் முலம் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">மின்சாரம் </a>தயாரிக்கின்றனர். இது ஒரு பனிப்பிரதேசம் என்பதால் அங்குள்ள வீடுகளை கதகதப்பாக வைத்திருக்க மாவட்ட வெப்பமய அமைப்பு செயல்பட்டு வருகிறது.</p> <h2>கழிவு மேலாண்மை</h2><p>உணவு கழிவுகள் மற்றும் அழுகிய காய்கறிகள் உள்ளிட்ட உயிரியல் கழிவுகளை தனியாக பிரித்து அவற்றில் இருந்து பயோகேஸ் தயாரிக்கப்படுகிறது. இந்த பயோகேஸ் பொது போக்குவரத்து உள்ளிட்ட வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. குப்பைகளை எரிப்பதால் வெளியாகும் புகையில் உள்ள நச்சுப் பொருட்களை கட்டுப்படுத்த நவீன வடிகட்டுதல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் புகை வெளியேற்றப்படுவதாக சுவீடனின் கழிவு மேலாண்மை அமைப்பு கூறியுள்ளது.</p> <p>குப்பைகளை எரித்த பிறகு கிடைக்கும் சாம்பலில் இருந்து உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. மீதமுள்ள சாம்பல் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை அமைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.</p><p>சுவீடன் குப்பைகளை மற்ற நாடுகளிடம் இருந்து பெற்று மின்சாரம் தயாரிப்பதோடு பெரும் லாபத்தை பெற்று வருகிறது என்றால் மிகையல்ல.</p>]]></content:encoded></item><item><title>கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/cinema/cinemanews/did-i-ask-for-a-seat-in-kinathukadavu-constituency-director-lokesh-kanagaraj-explains</link><comments>https://www.dailythanthi.com/cinema/cinemanews/did-i-ask-for-a-seat-in-kinathukadavu-constituency-director-lokesh-kanagaraj-explains#comments</comments><guid isPermaLink="false">db9fa9e4-0a83-4a4c-a630-7e846727a72c</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:03:01 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:03:01.005Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,லோகேஷ் கனகராஜ்,director Lokesh Kanagaraj,Actor Vijay,கிணத்துக்கடவு,Kinathukadavu</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8sgi01bk/5.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8sgi01bk/5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><content:encoded><![CDATA[ <p>கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டதாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கூறிய தகவலுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.</p>  <p>தமிழ்நாடு சட்டசபையில் நேற்று முன்தினம் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த ஒரு தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.</p><p>சட்டசபையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், முதல்-அமைச்சர் விஜய்யிடம் பிரபல இயக்குநர் ஒருவர் சீட் கேட்டார். ஆனால் அவர் கேட்ட தொகுதியில் நீண்ட காலமாக கட்சியில் பணியாற்றி வரும் மாவட்ட செயலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் இயக்குநரிடம் கூறிவிட்டதாக அமைச்சர் என்.ஆனந்த் பேசினார். அமைச்சர் ஆனந்த் பேசிக்கொண்டிருந்தபோது, வேளாண் துறை அமைச்சர் வினோத்  அருகில் இருந்த கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷை சுட்டிக்காட்டிய வீடியோ வைரலானது. </p><p>அவரது பேச்சு வைரலாகி த.வெ.க. சார்பில் போட்டியிட தேர்தலில் சீட் கேட்ட இயக்குநர் யார்? என்பது பேசும் பொருளானது. இயக்குநர் கேட்ட தொகுதி அமைச்சர் விக்னேசின் கிணத்துக்கடவு தொகுதி என தகவல் பரவியது. </p><p>இந்நிலையில்,  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், “நான் ஏன் அதை கேட்க வேண்டும். அமைச்சர் என்.ஆனந்த் குறிப்பிட்ட நபர் நான் இல்லை. வேறு யாராவது இருக்கலாம்” என பதில் அளித்தார். இதன் மூலம், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்திடம் தாம் தொகுதி கேட்டதாக வெளியான தகவலை லோகேஷ் கனகராஜ் மறுத்துள்ளார்.</p><h2>வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்</h2><p>‘மாநகரம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இவர் நடித்த ‘டிசி’ திரைப்படம் 15 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title> சவுகார் ஜானகி மறைவு: அன்புமணி ராமதாஸ்  இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-actress-saukar-janaki-dies-anbumani-ramadoss-pays-tribute</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/south-indian-actress-saukar-janaki-dies-anbumani-ramadoss-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">fe8f6515-7d11-4be2-bbca-9fed7fe32c6d</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:56:33 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:56:33.848Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,Anbumani Ramadoss,இரங்கல்,condolences,மறைவு,Sowcar Janaki,சவுகார் ஜானகி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/olt0p5tz/janaki.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ சவுகார் ஜானகி,அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ சவுகார் ஜானகி மறைவு: அன்புமணி ராமதாஸ்  இரங்கல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/olt0p5tz/janaki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p> சவுகார் ஜானகி மறைவுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> தனது இரங்கலை தெரிவித்தார்.</p><h2> சவுகார் ஜானகி</h2><p>1931-ம் ஆண்டு பிறந்த <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF">சவுகார் ஜானகி</a>, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர்.</p><h2>400-வது படம்</h2><p>கடந்த 1950ஆம் ஆண்டு, 'சவுகார்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான சவுகார்ஜானகி, 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான 'பிஸ்கோத்' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சவுகார் ஜானகிக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி அம்மையார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.</p><h2>இரங்கல்</h2><p>1952-ஆம் ஆண்டில்  திரையுலகில் அறிமுகமாகி  எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி தமிழ்த் திரையுலகின் அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர். ஏராளமான விருதுகளை வென்றவர். நடிகை சவுகார் ஜானகியை இழந்து வாடும்  அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>4 முதல்வர்களுடன் திரையுலகில் பயணித்தவர்:  செளகார் ஜானகியின் வாழ்க்கை பயணம்</title><link>https://www.dailythanthi.com/cinema/cinemanews/one-who-journeyed-through-the-film-world-alongside-four-chief-ministers-the-life-journey-of-sowcar-janaki</link><comments>https://www.dailythanthi.com/cinema/cinemanews/one-who-journeyed-through-the-film-world-alongside-four-chief-ministers-the-life-journey-of-sowcar-janaki#comments</comments><guid isPermaLink="false">4e5b5263-c46b-4004-86dd-765ab95ae9fc</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:55:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:55:46.235Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Actress,Sowcar Janaki,பழம்பெரும் நடிகை,Andhra - ஆந்திரா,செளகார் ஜானகி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xvn1i5ak/sowcar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செளகார் ஜானகி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xvn1i5ak/sowcar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><content:encoded><![CDATA[  <p>பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் அளவில் அவரது உயிர் பிரிந்தது.  செளகார்  ஜானாகியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். </p><h2>செளகார் ஜானகி  வாழ்க்கை பயணம்</h2><p>ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931-ல் பிறந்தவர் செளகார் ஜானகி  . தந்தை காகித மில் அதிபர். இவரது தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் படித்தார். குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தனது 15 வயதில் ஆல் இந்தியா ரேடியோவில் அறிவிப்பாளராக பணியாற்றினார். அவரது குரலைக்கேட்டு தெலுங்குப்பட தயாரிப்பாளர் அவரை திரைப்படத்தில் நடிக்க அணுகியபோது அவரது குடும்பத்தார் மறுத்து அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். ஒரே ஆண்டில் குழந்தை, குடும்ப வறுமை, கணவரிடம் நிலையைச் சொல்லி அதே தயாரிப்பாளர் வி.என்.ரெட்டி வீட்டு வாசல் கதவை கைக்குழந்தையுடன் தட்டினார் சௌகார் ஜானகி. </p><h2>சௌகார் படத்தில் அறிமுகம்</h2><p>கைக்குழந்தை, திருமணமாகிவிட்டது, சாத்தியமே இல்லையம்மா என தயாரிப்பாளர் சொல்ல குடும்ப நிலையை கூறியுள்ளார் சௌகார் ஜானகி. தயாரிப்பாளர் அவர் தம்பி எடுக்கும் படத்திற்கு அவரை சிபாரிசு செய்ய நடிகர் என்.டி.ராமாராவ் கதாநாயகனாக அறிமுகமான ‘சௌகார்’படத்தில்கதாநாயகியாக அறிமுகமானார். 1947 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். அன்றைய காலகட்டத்தில் வி.என்.ஜானகி என்றொரு கதாநாயகி நடிகை இருந்ததாலும் ,இவர் சௌகார் படத்தில் அறிமுகமானதாலும் சௌகார் ஜானகி ஆனார்.</p><h2>முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்</h2><p>தமிழ் சினிமாவில் பல்வேறு பாத்திரங்களை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மு.கருணாநிதி கதை வசனத்தில் ‘குலக்கொழுந்து’ படத்தில் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. தமிழில் பாவேந்தர் பாரதிதாசன் வசனம் எழுதிய வளையாபதி படத்தில் அவரது வசனத்தை பேசி நடித்துள்ளார். நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் குமுதம் படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், சிவகுமார், ரஜினி, கமல் என  முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு . 73 வருடங்களாக திரையில் ஜொலித்த சவுகார் ஜானகி, 4 முதல்வர்களுடன் சினிமாவில் சம காலத்தில் பயணித்தவர். ஆந்திர முதல்வராக இருந்த என்.டி ராமராவ், தமிழக முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் திரைத்துறையில் பயணித்துள்ளார்.</p> <h2>வாழ்நாள் சாதனையாளர் விருது</h2><p>எந்த மொழியானாலும் அவரே டப்பிங் பேசுவார்.   காவியத்தலைவி, ரங்கராட்டினம் ஆகிய 2 படங்களை தயாரித்தார். தெலுங்கு திரைப்பட விருதுகள் கமிட்டி தலைவராகப் பணிபுரிந்தார். சமையல், தோட்டக் கலையில் வல்லவர்.சென்னையில் 1965-ல் சத்ய சாய்பாபாவை சந்தித்த பிறகு, அவரை தன்குருவாக ஏற்றுக்கொண்டார். அவரால்தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.  2022-க்கான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.  திரையுலகில் தைரியமான யதார்த்த நடிகை என பெயரெடுத்தவர் திரையுலகில்  சுமார் 70 ஆண்டுகாலம்  நடித்த ஜானகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவராக  இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>சென்னை: கால்வாய்களில் குப்பைக் கழிவுகளை டிரோன் மூலம் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-drone-survey-of-canal-waste-begins</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-drone-survey-of-canal-waste-begins#comments</comments><guid isPermaLink="false">25409c8a-4aff-449d-9a3a-4c32600f8b71</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:49:51 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:49:51.039Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,Drone,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Canal,கால்வாய்,டிரோன்,குப்பைகள்,கணக்கெடுக்கும் பணி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/kv4onnsc/Untitled-4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/kv4onnsc/Untitled-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள் உள்ளிட்டவற்றை டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகளை கொடுங்கையூர் வடக்கு கால்வாயில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><p>வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகளை விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளும் வகையில் டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகளை இன்று (21.08.2026) தண்டையார்பேட்டை மண்டலம், முத்தமிழ் நகர் 2-வது பிளாக்கில் உள்ள கொடுங்கையூர் வடக்கு கால்வாயின் தொடக்க இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வில், மண்டல அலுவலர் ஏ.ராஜ்குமார், செயற்பொறியாளர் எஸ்.ஹரிநாத் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.</p><p>முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கொடுங்கையூர், வீராங்கல் ஓடை, மாம்பலம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், கேப்டன் காட்டன், டிரஸ்ட்புரம், ரெட்டிகுப்பம், பள்ளிக்கரணை, செக்ரடரியேட் காலனி உள்ளிட்ட 81.81 கி.மீ. நீளத்திலான 44 கால்வாய்களில் வண்டல்கள், குப்பைக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகளை விஞ்ஞானபூர்வமாக மேற்கொள்ளும் வகையில் டிரோன் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.</p><p>இன்று (21.08.2026) கொடுங்கையூர் வடக்கு கால்வாய், வீராங்கல் ஓடை மற்றும் மேற்கு மாம்பலம் கால்வாயில் இந்த டிரோன் மூலம் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. களஆய்வை விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்ள, தினசரி சுமார் 4 முதல் 5 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு, கால்வாய்கள் கட்டம் வாரியாக ஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு டிரோனுக்கும் குறிப்பிட்ட கால்வாய் பகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஆய்வின் முன்னேற்றம் மற்றும் பெறப்படும் தரவுகள் முறையாக கண்காணிக்கப்படும்.</p><p>ஆய்வின் மூலம் பெறப்படும் அனைத்து படங்கள், காணொலிகள் மற்றும் புவியியல் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கால்வாய்களின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் GIS அடிப்படையிலான தரவுத்தளம் மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்படும். இதனடிப்படையில், பருவமழைக்கு முன்னதாக கால்வாய்களில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாருதல், அடைப்புகளை அகற்றுதல், சேதமடைந்த பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் நீரோட்டத்தைத் தடையின்றி உறுதி செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எல்லைகள் பாதுகாக்கப்படுவதில் தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது - அமித்ஷா</title><link>https://www.dailythanthi.com/news/india/the-security-of-the-country-lies-in-securing-the-borders-amit-shah</link><comments>https://www.dailythanthi.com/news/india/the-security-of-the-country-lies-in-securing-the-borders-amit-shah#comments</comments><guid isPermaLink="false">01921e1e-669d-4774-ae5a-867e8c674987</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:43:37 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:43:37.322Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,Mamata Banerjee,அமித்ஷா,West Bengal,எல்லை பாதுகாப்பு</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/y9trefel/amithsaa33.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[  நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/y9trefel/amithsaa33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தேசிய செய்திகள் (National News)</category><content:encoded><![CDATA[ <p>கொல்கத்தா,</p><p>எல்லைகள் பாதுகாக்கப்படுவதில் தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.</p><p>மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:</p><p>திறந்த எல்லையைப் பாதுகாக்கும் எஸ்.எஸ்.பி. வீரர்களின் பணியே மிகவும் கடினமானது என்று நான் எப்போதும் கூறுவேன். தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் சிலிகுரி வழித்தடத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி அரசு அங்கீகரித்துள்ளது. இது 8 மாநிலங்களை இணைக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாகும். மேலும், நேபாளம், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளின் சர்வதேச எல்லைகள் இங்கு சந்திக்கின்றன. நாங்கள் சோப்ரா, கிஷன்கஞ்ச் மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் நமது பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்.</p><h2>நாட்டின் பாதுகாப்பு</h2><p>பிஎஸ்எப்-க்கு நிலம் ஒதுக்குமாறு <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி</a>யிடம் நாங்கள் அயராமல் வேண்டுகோள் விடுத்தோம், ஆனால் அவர் பதவி விலகும் வரை அவ்வாறு செய்யவில்லை. நான் ஒருமுறை அவரது அலுவலகத்திற்கே சென்று, இந்த நிலம் பிஎஸ்எப்-க்கானது, பாஜக-வுக்கானது அல்ல என்று அவரிடம் விளக்கியிருந்தேன்</p><p>பிஎஸ்எப் மூலம் எல்லை வேலி அமைப்பதற்கான நிலத்தைக் கேட்டு, மம்தா பானர்ஜியிடம் நான் விடுத்த தீவிர கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமல் போயின; எல்லைகள் பாதுகாக்கப்படுவதில் தான் நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது.</p><h2>பாஜக அரசு</h2><p>பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்தியா-வங்காளதேச எல்லைக்கு வேலி அமைப்பதற்குத் தேவையான நிலத்தை முந்தைய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வழங்கவில்லை. எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த 2014ம் ஆண்டு முதல் நான் கேட்டு வந்த 1,129 ஏக்கர் நிலம் தற்போது முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின்னரே கிடைத்தது.</p><h2>'வந்தே மாதரம்' பாடலின் முழு வடிவம்</h2><p>நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து தேசியப் பாடலான 'வந்தே மாதரத்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்காத முந்தைய அரசுகளின் செயல் குறித்து நான் வருத்தம் அடைந்தேன். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது செங்கோட்டையில் பாடப்படும் வரை, 'வந்தே மாதரம்' பாடலின் முழு வடிவம் இந்தியாவில் ஒருபோதும் பாடப்படவில்லை.</p><p>பங்கிம் சந்திர சட்டோபாத்யாயால் இப்பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆன நிலையில், தேசம் இறுதியாக இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது எனக்கு ஆறுதல் அளிக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>யு20 உலக மல்யுத்தம்: தொடர்ந்து 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை</title><link>https://www.dailythanthi.com/sports/othersports/kajal-dhochak-wins-gold-as-india-bag-two-silver-medals-at-u20-wrestling-worlds</link><comments>https://www.dailythanthi.com/sports/othersports/kajal-dhochak-wins-gold-as-india-bag-two-silver-medals-at-u20-wrestling-worlds#comments</comments><guid isPermaLink="false">78b92e96-0bdb-4d81-b161-eb87f0b17f84</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:40:31 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:40:31.223Z</atom:updated><atom:author><atom:name>விளையாட்டுச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514347</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கப் பதக்கம்,யு20 உலக மல்யுத்தம்,காஜல் தோசாக்,Kajal Dhochak,U20 Wrestling Worlds</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/9htyduft/wre.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்லோவாக்கியாவில் நடைபெற்று வரும் 2026-ம் ஆண்டுக்கான யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில்  18 வயதான இந்திய வீராங்கனை காஜல் தோசாக், தொடர்ந்து 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/9htyduft/wre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பிற விளையாட்டு (Other sports)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்லோவாக்கியா,</p><p>ஸ்லோவாக்கியாவில் நடைபெற்று வரும் 2026-ம் ஆண்டுக்கான யு20 உலக <a href="http://dailythanthi.com/search?q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">மல்யுத்த </a>சாம்பியன்ஷிப் போட்டியில்  18 வயதான இந்திய வீராங்கனை காஜல் தோசாக், தொடர்ந்து 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.</p><h2>76 கிலோ பிரிவில் காஜலுக்கு தங்கம்</h2><p>மகளிர் 76 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் ஜிங்ரூ சுனை எதிர்கொண்ட காஜல் தோசாக், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பாக செயல்பட்ட அவர், சீன வீராங்கனையை 7-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.</p><h2>தொடர்ந்து தங்கம் வென்று வரும் காஜல்</h2><p>காஜல் தோசாக்கிற்கு இது முதல் உலக சாம்பியன்ஷிப் தங்கம் அல்ல. ஏற்கனவே 2024-ம் ஆண்டு யு17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 69 கிலோ பிரிவிலும், 2025-ம் ஆண்டு யு20 உலக சாம்பியன்ஷிப்பில் 72 கிலோ பிரிவிலும் அவர் தங்கம் வென்றுள்ளார்.</p><h2>தனு சர்மாவுக்கு வெள்ளி</h2><p>மேலும், இந்தியாவின் தனு சர்மா மற்றும் சவிதா ஆகியோர் தங்களது பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.</p><p>மகளிர் 72 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் தனு சர்மா, ஜப்பானின் சிசாடோ யோஷிடாவை எதிர்கொண்டார்.</p><p>விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் தனு சர்மா கடுமையாகப் போராடியபோதிலும், 3-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இதன்மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.</p><h2>சவிதாவுக்கும் வெள்ளிப் பதக்கம்</h2><p>மகளிர் 62 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சவிதா, ஜப்பானின் சகுரா ஓனிஷியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் சவிதா 2-12 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.</p><h2>இந்தியாவுக்கு மேலும் பதக்க வாய்ப்பு</h2><p>யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு இன்னும் பல பதக்க வாய்ப்புகள் உள்ளன.</p><p>மகளிர் பிரிவில் 57, 59 மற்றும் 68 கிலோ எடைப்பிரிவுகளிலும், ஆண்களுக்கான பிரீஸ்டைல் பிரிவில் 61 மற்றும் 86 கிலோ எடைப்பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.</p><p>இதனால் வரும் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மேலும் பல பதக்கங்களை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆக. 23 முதல் ஈஷா கிராமோத்சவ போட்டிகள்: செப். 6-ல் கோவையில் மகா இறுதிப்போட்டி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-isha-gramotsavam-finals-in-coimbatore-on-september-6</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/grand-isha-gramotsavam-finals-in-coimbatore-on-september-6#comments</comments><guid isPermaLink="false">d3e3f827-13d5-4b05-846e-c04ee3c41f68</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:39:42 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:39:42.981Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவை,தமிழகம்,Isha Centre,ஈஷா,Competitions,போட்டிகள்,விளையாட்டு,In Tamil Nadu</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8lq795gh/isha-sports.jpg" width="752"><media:title type="html"><![CDATA[  டாக்டர் சுந்தர்,மகேந்திரன், தீபா,மகேஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ 
தமிழகத்தில் ஆக. 23 முதல் ஈஷா கிராமோத்சவ போட்டிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/8lq795gh/isha-sports.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழ்நாட்டில் ஆக.23-ஆம் தேதி<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%88%E0%AE%B7%E0%AE%BE"> ஈஷா</a> கிராமோத்சவ மண்டல அளவிலான போட்டிகள் செப். 6-ஆம் தேதி சத்குரு முன்னிலையில் கோவையில் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.</p><h2>10 மாநிலங்கள்</h2><p>சத்குருவின் ஈஷா அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 'ஈஷா கிராமோத்சவம்', இந்தாண்டு வட மாநில கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 10 மாநிலங்களில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. </p> <h2>செப்டம்பர் 6 ஆம் தேதி</h2><p>தமிழ்நாட்டின் 6 முக்கிய இடங்களில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஈஷா கிராமோத்சவத்தின் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் பங்கேற்கும் மாபெரும் இறுதிப்போட்டி, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு அவர்களின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.</p><h2> பத்திரிகையாளர் சந்திப்பு</h2><p>இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் ஈஷா கிராமோத்சவத்தின் தன்னார்வலர்கள் பிரபல எலும்பியல் நிபுணர் டாக்டர் சுந்தர், மகேந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தீபா, வாலிபால் விளையாட்டு வீரர் மகேஷ் ஆகியோர் பங்கேற்று பேசினர்.</p> <p><strong>டாக்டர் சுந்தர் பேசுகையில்,</strong></p><h2>கிராமோத்சவம்</h2><p> “நம் கிராமங்களில் 60 சதவீத மக்கள் உழைக்கும் வயதில் இருந்தாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் நலிவடையும் விவசாயம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் வறுமையின் பிடியில் சிக்குவதும் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. இந்த சூழலை மாற்றி, "கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒர் அங்கமாக மாற்ற வேண்டும்" என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 'ஈஷா கிராமோத்சவம்' 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இளைஞர்களுக்கு உத்வேகம், பெண்கள் சுயமுன்னேற்றம், அனைத்து வயதினரும் விளையாடும் வாய்ப்பு, ஆரோக்கியம், சமூக ஒற்றுமை மற்றும் கிராமப்புறத் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறந்த தளமாக கிராமோத்சவம் விளங்கி வருகிறது.</p> <h2>வாலிபால் மற்றும்  த்ரோபால் போட்டிகள்</h2><p> இப்போட்டி தொடரில் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. கிராமப்புறங்களை சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2> புதிதாக 5 மாநிலங்களில் போட்டி</h2><p>இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மராட்டியம் ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன. </p><p>தமிழ்நாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகள் நடைபெற்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளிலும், அதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.</p><h2> 7,005 அணிகள்</h2><p>இதில் வாலிபால் பிரிவில் 2,246 அணிகளை சேர்ந்த 26,952 வீரர்களும், த்ரோபால் பிரிவில் 31 இடங்களில் 744 அணிகளைச் சேர்ந்த 7,440 வீரர்களும் பங்கேற்றனர். இம்முதற்கட்டப் போட்டிகளில் மொத்தம் சுமார் 34,392 கிராமப்புற மக்கள் பங்கேற்று விளையாடினர். அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், மதுரை, திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட 6 இடங்களில் மண்டல அளவிலானப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளன. இந்த மாபெரும் விளையாட்டு திருவிழாவில், சுமார் 7,005 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பெண்கள் உட்பட 80,352 கிராமப்புற மக்கள் பங்கேற்றுள்ளனர். </p><h2>பரிசுத்தொகை</h2><p>ஈஷா கிராமோத்சவம் 2026-இன் பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு அவர்களின் முன்னிலையில் நடைபெறும். இந்த இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மேலும், மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் பரிசாக வழங்கப்படவுள்ளது.</p> <h2>இருசக்கர வாகனம் பரிசு</h2><p>இதுமட்டுமின்றி, கிளஸ்டர் மற்றும் டிவிஷனல் போட்டிகளிலும் வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், “6 மண்டலங்களிலும் தேர்வு செய்யப்படும் சிறந்த பெண் த்ரோபால் வீராங்கனைகளுக்கு எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்படவுள்ளது.”</p><h2> கிராமிய கலாச்சார கொண்டாட்டம்</h2><p>மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பிரத்யேகப் பரிசுகள் வழங்கப்படும். கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளையாட்டுத் திருவிழாவில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கிராமிய கலாச்சார கொண்டாட்டம்.</p> <h2> பண்பாட்டு திருவிழா</h2><p>கிராமோத்சவம் என்பது வெறும் விளையாட்டு போட்டிகளோடு நின்றுவிடாமல், பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை, நடனம், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கிராமத்து உணவுகள் என நம் கிராமத்து மரபுகளை முழுமையாக கொண்டாடும் பண்பாட்டு திருவிழாவாக திகழ்கிறது. அந்த வகையில், தற்போது நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டி நடைபெறும் இடங்களிலும், கோவையில் நடைபெறும் இறுதிப்போட்டி வளாகத்திலும் இத்தகைய கலை மற்றும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளன  எனக் கூறினார்.</p><h2>கவனம் செலுத்த முடியும்</h2><p>தனிநபர்களையும் சமூகங்களையும் வடிவமைப்பதில் விளையாட்டின் ஆழமான பங்களிப்பு பற்றி சத்குரு கூறுகையில், “வாழ்க்கையை விளையாட்டுத்தனத்தோடு எதிர்கொள்வதே நாம் வாழ்வதற்கான ஆகச்சிறந்த பொறுப்பான வழியாகும். எப்போதும் வாடிய முகத்தோடு இந்த பூமியில் உலா வருவது முற்றிலும் பொறுப்பற்ற செயல். வாழ்க்கையில் விளையாட்டுத்தனத்தோடு இருப்பது என்பது பொறுப்பான மற்றும் சரியான செயலாற்றும் நிலையில் இருப்பதை குறிக்கிறது. நீங்கள் எப்போது விளையாட்டுத்தனத்தோடு இருக்கிறீர்களோ, அப்போதுதான் உங்களால் எல்லாவற்றின் மீதும் முழு கவனம் செலுத்த முடியும்.</p> <h2>பிட் இந்தியா அமைப்பின் அங்கீகாரம் </h2><p>www.instagram.com/reel/DZJnYsWzCWn பிட் இந்தியா (FIT India) அமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ள ஈஷா கிராமோத்சவம், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தால் ‘தேசிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாக’ (NSPO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் விளையாட்டை ஊக்குவித்ததற்காக 2018-ஆம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய கேல் ப்ரோத்சாஹன் புரஸ்கார்’ விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.” எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சவுகார் ஜானகி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/cinema/cinemanews/kamal-haasan-condoles-death-of-sowcar-janaki</link><comments>https://www.dailythanthi.com/cinema/cinemanews/kamal-haasan-condoles-death-of-sowcar-janaki#comments</comments><guid isPermaLink="false">5492fe01-a482-4111-87ba-585f55f3d3e3</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:31:56 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:31:56.017Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>கமல்ஹாசன்,Kamal Haasan,Sowcar Janaki,சவுகார் ஜானகி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/trmtmnj2/4.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/trmtmnj2/4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><content:encoded><![CDATA[ <p>சவுகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும்   சவுகார் ஜானகியின் வயது 94. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p><p>இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நடிகை சவுகார் ஜானகி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>கமல்ஹாசன் இரங்கல்</h2><p>இந்த நிலையில், சவுகார் ஜானகி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில்  “ ‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சவுகார் ஜானகி. அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்” என்று கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி. <br><br>அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின்…</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://x.com/ikamalhaasan/status/2090738387431080314?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-condoles-death-of-sowcar-janaki</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-condoles-death-of-sowcar-janaki#comments</comments><guid isPermaLink="false">8ad431f9-ef0c-4690-845d-12c08bbe582c</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:25:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:25:17.496Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இரங்கல்,condolences,Sowcar Janaki,சவுகார் ஜானகி,முதல்-அமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pa4ab1bz/Untitled-3.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/pa4ab1bz/Untitled-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. இந்த நிலையில் சவுகார் ஜானகியின் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சவுகார் ஜானகி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.</p><p>திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சவுகார் ஜானகியின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.</p><p>சவுகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 4-ம் நிலை ஜோடிக்கு ‘ஷாக்’ கொடுத்த இந்தியாவின் திரிஷா - காயத்ரி... பதக்கம் உறுதி</title><link>https://www.dailythanthi.com/sports/othersports/bwf-world-cships-treesa-gayatri-stuns-world-no-4-chinese-to-secure-indias-first-medal-in-womens-doubles</link><comments>https://www.dailythanthi.com/sports/othersports/bwf-world-cships-treesa-gayatri-stuns-world-no-4-chinese-to-secure-indias-first-medal-in-womens-doubles#comments</comments><guid isPermaLink="false">b64bcaba-91a5-46fd-a078-04c6299630d9</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:14:41 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:14:41.689Z</atom:updated><atom:author><atom:name>விளையாட்டுச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514347</atom:uri></atom:author><description></description><media:keywords>பேட்மிண்டன்,உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்,திரிஷா ஜாலி,காயத்ரி கோபிசந்த்,BWF World Championship</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ukk6ipe8/tr.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ukk6ipe8/tr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பிற விளையாட்டு (Other sports)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா,</p><p>உலக <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D">பேட்மிண்டன் </a>சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>உலகின் 4-ம் நிலை ஜோடிக்கு அதிர்ச்சி</h2><p>காலிறுதிப் போட்டியில் இந்திய ஜோடி, உலக தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ள சீனாவின் ஜியா யிபான் - ஜாங் ஷுசியான் ஜோடியை எதிர்கொண்டது.</p><p>முதல் செட்டை இந்திய ஜோடி 16-21 என்ற கணக்கில் இழந்தது. இதனால் போட்டியில் சீன ஜோடியின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரிஷா - காயத்ரி ஜோடி அடுத்தடுத்த செட்களில் அபாரமாக கம்பேக் கொடுத்தது.</p><h2>அரையிறுதிக்கு முன்னேற்றம்</h2><p>2-வது செட்டில் அதிரடியாக விளையாடிய இந்திய ஜோடி 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியை சமன் செய்தது. வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய திரிஷா - காயத்ரி ஜோடி 21-13 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றியது.</p><p>இதன்மூலம் இந்திய ஜோடி 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் 4-ம் நிலை ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.</p><h2>இந்தியாவுக்கு பதக்கம் உறுதி</h2><p>உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய ஜோடி என்ற வரலாற்று சாதனையையும் இந்த கூட்டணி படைத்துள்ளது.</p><h2>2011-க்கு பிறகு </h2><p>இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு ஜவாலா கட்டா - அஸ்வினி ஜோடி உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றிருந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரிஷா - காயத்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>முதல் நாளில் ரூ.14 கோடி வசூலித்த பிரித்விராஜின் “கலிபா” </title><link>https://www.dailythanthi.com/cinema/cinemanews/prithvirajs-khalifa-film-collected-rs-14-crore-on-the-first-day</link><comments>https://www.dailythanthi.com/cinema/cinemanews/prithvirajs-khalifa-film-collected-rs-14-crore-on-the-first-day#comments</comments><guid isPermaLink="false">abb93bb3-a9d0-4d14-9420-013a6cd5d0f1</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:14:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:14:22.631Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>பிருத்விராஜ்,Prithviraj,Khalifa,Director Vysakh,இயக்குநர் வைசாக்,கலிபா</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/9fgu92m8/3.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/9fgu92m8/3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><content:encoded><![CDATA[ <p>பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘கலிபா’ படம்  முதல் நாளில் ரூ.14.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  </p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5xblfnhp/3a.jpg" /></figure><p>நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான புதிய ஆக்சன் திரைப்படமான ‘கலிபா’ ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது. டர்போ திரைப்படத்தை இயக்கிய வைசாக் இப்படத்தை இயக்கியுள்ளார். அவருடன் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார்.</p><p>ஜினு ஆபிரகாம் இதற்கு முன்பு பிருத்விராஜ் நடித்த 'ஆடம் ஜோன்', 'கடுவா' உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார். பழிவாங்கும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘கலிபா’ திரைப்படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.</p><h2>பல நாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்பு</h2><p>கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி லண்டனில் தொடங்கிய ‘கலிபா’ படத்தின் படப்பிடிப்பு, லண்டன், துபாய், நேபாளம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மேலும், இப்படத்தில் நடிகர் மோகன்லால் மாஃபியா டான் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/85oy3qcg/3b.jpg" /></figure><h2>சிறப்பு தோற்றத்தில் நடிகர் மோகன்லால்</h2><p>தங்க கடத்தலை பின்னணியாகக் கொண்டு நாயகனுக்கும் கேங்ஸ்டருக்குமான கதையாக உருவான இப்படத்தின் டீசர், டிரெய்லர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சிறப்பு தோற்றத்தில் நடிகர் மோகன்லாலும் நடித்துள்ளார்.</p><h2>படப்பிடிப்பு நிறைவு... வெளியீட்டு தேதி அறிவிப்பு</h2><p>‘கலிபா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. </p><p>‘கலிபா’ படத்தின் ‘நிலவே’ பாடலை சித் ஸ்ரீ ராம் மற்றும் மக்பூல் மன்சூர் இணைந்து பாடியுள்ளனர். </p><h2>படத்தின் வசூல் அறிவிப்பு</h2><p>இந்நிலையில்,  பிருத்விராஜ் நடிப்பில் உருவான ‘கலிபா’ படம்  முதல் நாளில் ரூ.14.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcSwkMFhQWa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcSwkMFhQWa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு: தெலங்கானா  முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு</title><link>https://www.dailythanthi.com/news/india/central-government-denies-permission-for-us-visit-telangana-chief-minister-revanth-reddy-alleges</link><comments>https://www.dailythanthi.com/news/india/central-government-denies-permission-for-us-visit-telangana-chief-minister-revanth-reddy-alleges#comments</comments><guid isPermaLink="false">b18ca2c2-1c53-4030-b5db-34c227cc4af2</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:11:23 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:11:23.692Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,Telengana,தெலங்கானா</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/2j62u9x8/Revanth-Reddy.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரேவந்த் ரெட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/2j62u9x8/Revanth-Reddy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தேசிய செய்திகள் (National News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருக்கும் ரேவந்த் ரெட்டி, அங்கிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற 30-ந் தேதி ஐதராபாத் திரும்ப அவர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் வருகிற 23-ந் தேதியே லண்டனில் இருந்து ஐதராபாத் திரும்புகிறார்.</p> <h2>இங்கிலாந்து செல்ல மட்டுமே அனுமதி</h2><p>இதுதொடர்பாக தெலங்கானா முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-ரேவந்த் ரெட்டி தலைமையிலான அதிகாரப்பூர்வ குழு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா செல்ல மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதில் இங்கிலாந்து செல்வதற்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்தது.முதல்-மந்திரி தலைமையிலான குழு இங்கிலாந்து சென்ற பிறகுதான், அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை மத்திய அரசு மறுத்தது. அரசியல் காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>பயணம் ரத்து</h2><p>இதன் காரணமாக ரேவந்த் ரெட்டி தலைமையிலான குழு தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்கும், தெலங்கானாவுக்கும், குறிப்பாக ஐதராபாத்துக்கும் கொண்டு வருவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதன் மூலம் உலகின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து கல்வி மற்றும் பயிற்சியை பெற வேண்டும் என்ற இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு காண முடியும்.தேசத்தை கட்டியெழுப்புவது மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகிய விஷயங்களில் அரசியல் மற்றும் தேர்தல்களுக்கு அப்பாற்பட்டு நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி - நரசப்பூர் இடையே சிறப்பு ரெயில்: சென்னை எழும்பூர் வழியாக இயக்கம் </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tuticorin-and-narsapur-to-run-via-chennai-egmore</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-between-tuticorin-and-narsapur-to-run-via-chennai-egmore#comments</comments><guid isPermaLink="false">ccd2cc7a-7df2-4b93-95fb-72d20f72d6a7</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:08:04 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:08:04.338Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,தூத்துக்குடி,Tuticorin,Chennai Egmore,சென்னை எழும்பூர்</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/o87e0w1m/State-02.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/o87e0w1m/State-02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி - ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே சிறப்பு ரெயில் சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>“தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி  எண் 06019) 3-வது நாள் இரவு 12.20 மணிக்கு நரசப்பூரை சென்றடையும்.</p><p>மறுமார்க்கத்தில், நரசப்பூரில் இருந்து செப்டம்பர் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06020) மறுநாள் காலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். </p><p>18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழகத்தில் மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்டு 22-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.”</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் ஸ்டார்லிங்கை அறிமுகப்படுத்த மீண்டும் விண்ணப்பித்த எலான் மஸ்க்!
</title><link>https://www.dailythanthi.com/news/world/elon-musk-has-re-applied-to-launch-starlink-in-india</link><comments>https://www.dailythanthi.com/news/world/elon-musk-has-re-applied-to-launch-starlink-in-india#comments</comments><guid isPermaLink="false">8bd4830b-9893-4509-b3d5-9048f4868d28</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:06:23 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:06:23.034Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,எலான் மஸ்க்,Elon Musk,SpaceX,ஸ்டார்லிங்க்,Starlink Satellite,எலன் மஸ்க்</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z5umwkq1/starllink.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்]]></media:title><media:description type="html"><![CDATA[ மீண்டும் விண்ணப்பித்துள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z5umwkq1/starllink.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலக செய்திகள் (World News)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி</p><p>எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையைத் தொடங்க இதற்கு முன்னதாக ஒப்புதல் பெறுவதில் தடைகளை எதிர்கொண்ட நிலையில், மீண்டும் விண்ணப்பித்துள்ளது.</p><p>உலகின் முன்னனி தொழிலதிபர் மற்றும் உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D">எலான் மஸ்க்</a> தனது ஸ்டார்லிங்க் சேவையை உலகின் பல்வேறு நாடுகளில் விரிவுபடுத்தினார். அந்த வகையில் இந்தியாவிலும் அந்த சேவையை அறிமுகப்படுத்த முற்பட்டார். ஆனால் ஸ்டார்லிங்கின் சில விதிமுறைகள், தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்திய விதிமுறைகளுடன் பொருந்தவில்லை என்பதால் ஒப்புதல் கிடைக்கவில்லை.</p> <h2>மாற்றங்களுடன் விண்ணப்பித்த ஸ்டார்லிங்க்</h2><p>இந்த நிலையில், இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் <a href="https://www.dailythanthi.com/topic/spacex">செயற்கைக்கோள்</a> இணையச் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியை எலான் மஸ்க் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்திடம் தற்போது, மாற்றங்களுடன் ஸ்டார்லிங்க் நிறுவனம் மீண்டும் விண்ணப்பித்துள்ளது.</p><p>குறிப்பாக,  இணைய இணைப்பு கிடைக்காத கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஸ்டார்லிங்க் சேவை உதவும் என அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிலளித்த <a href="https://www.dailythanthi.com/topic/elon-musk">எலான் மஸ்க்,</a> “ஸ்டார்லிங்க் இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், மிகக் குறைந்த சேவை பெறும் மக்களுக்கு உதவும்” எனக் கூறியுள்ளார்.</p> <h2>யாருக்கு அதிக பயன்?</h2><p>மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்கள் உள்ள இடங்களில் இதற்கான  செல்போன் டவர் மற்றும் தரைவழி கேபிள் மூலம் இணைய சேவையை வழங்க அதன் கட்டமைப்புகளை உருவாக்குவது அதிக செலவாகும். ஆனால், இந்த சிரமம் ஸ்டார்லிங்க் இணைய சேவையில் இருக்காது. </p><p>மேலும், இயற்கை பேரழிவான வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களின் போது செல்போன் டவர்கள் மற்றும் தரைவழி இணைய சேவைகள் பாதிக்கப்பட்டாலும், ஸ்டார்லிங்க் மூலம் இணைய இணைப்பை வழங்க முடியும். அதேநேரத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட பாரம்பரிய தொலைத்தொடர்பு சேவைகளுக்கு <a href="https://www.dailythanthi.com/topic/starlink-satellite">ஸ்டார்லிங்க் </a>முழுமையான மாற்றமாக இருக்காமல், அவற்றுடன் இணைந்து செயல்படும். மேலும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில்தான் இதன் சேவை அதிகமாக இருக்கும் என்று எலான் மஸ்க் கூறுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>பிச்சை எடுத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? சோதித்து பார்க்க களமிறங்கிய யூடியூபர்-எவ்வளவு கிடைத்தது தெரியுமா?</title><link>https://www.dailythanthi.com/news/india/youtuber-gets-friend-to-pose-as-a-beggar-in-haridwar-heres-how-much-he-earned</link><comments>https://www.dailythanthi.com/news/india/youtuber-gets-friend-to-pose-as-a-beggar-in-haridwar-heres-how-much-he-earned#comments</comments><guid isPermaLink="false">5b00a131-803a-459d-bd6a-50f83878aa04</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:51:34 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:51:34.194Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பணம்,பிச்சை,YouTuber,யூடியூபர்,beggar</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/byo4kveo/beggar.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யூடியூபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/byo4kveo/beggar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தேசிய செய்திகள் (National News)</category><content:encoded><![CDATA[ <p>இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு பேசாம பிச்சை எடுக்க போயிடலாம் போல என விளையாட்டாக பலரும்  சொல்வதை பார்த்து இருப்போம். அப்படி பிச்சை எடுத்தால் எவ்வளவு வருமானம்தான் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக பிரபல யூடியூபர் ஒருவர் நேரடியாக பிச்சைக்காரராக வேடமிட்டு பிச்சை எடுத்து இருக்கிறார். ஒருநாள் கூட முழுதாக பிச்சை எடுக்கவில்லை.  ஆனால் அதற்குள் கிடைத்த வருமானத்தை ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்ததாக தனது யுடியூப்  பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக  பரவி வருகிறது. யூடியூபர் புருஷோத்தம் விஷிஸ்த் என்பவர்தான், இந்த விசித்திர பரிசோதனையில் இறங்கி அதனை வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார். இது குறித்த விவரங்கள் பின்வருமாறு: </p><h2>அழுக்கு படிந்த துணிகளுடன்</h2><p>புரோஷத்தமும் அவரது நண்பர் சச்சினும்  ஹரித்வாரில் உள்ள சிவன் கோயிலுக்கு திருவிழா நாளில் சென்று இருக்கிறார்கள். புருஷோத்தமின் நண்பரான சச்சின் பிச்சைக்காரர்  போல வேடமிட்டு கோவிலில் பிச்சை எடுக்க போயிருக்கிறார். அதுவும் ஹைடெக் பிச்சைக்காரராக சென்று  இருக்கிறார். அதாவது கழுத்தில் கியூஆர் கோட் ஒன்றை தொங்கவிட்டபடி பிச்சை எடுக்க சென்றுள்ளார். பார்ப்பதற்கு பிச்சைக்கார் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக அழுக்குபடிந்த கிழிந்த துணிகளை உடுத்திக்கொண்டு, முகத்தையும் அழுக்காக்கி கொண்டு பிச்சை எடுக்கும் இடத்திற்கு சென்று தனது வேலையை ஆரம்பித்தார். இந்த பரிசோதனை முயற்சியில் எவ்வளவு பணம் கிடைத்தது என்று தெரிந்தால் வாயடைத்து போவீர்கள். </p><h2>மிகவும் சோர்வு</h2><p>சுமார் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கிடைக்கும் என்று இருவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆனால் 8 மணி நேரத்தில் 4 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்து இருக்கிறது. இதே அளவு தொகையை ஒருவர் தினமும் சம்பாதித்தால், ஒரு மாதத்தில் சுமார் ரூ.1.2 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும் என்றும்  யூடியூபர் புருசோத்தம் கூறினார்.  பிச்சை எடுப்பதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக சிரமம் இருப்பதாக இருவரும் தெரிவித்தனர். நாள் முழுவதும் தொடர்ந்து பலரிடம் சென்று பிச்சை கேட்பது மிகவும் சோர்வை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். </p> <h2>புரிந்துகொள்ள முடியாது</h2><p>இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரே நாளில் ரூ.4,000 கிடைத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மத வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் பிச்சை எடுப்பது சிலருக்கு வாழ்வாதாரமாக மாறிவிட்டதா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். அதேவேளையில், ஒரு நாள் மட்டும் நடத்தப்பட்ட பரிசோதனையை வைத்து, உண்மையில் பிச்சையை நம்பி வாழும் மக்களின் அன்றாட கஷ்டங்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரு வார காலத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை </title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-taken-on-272-complaints-within-a-week-through-the-singappenn-special-task-force</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/immediate-action-taken-on-272-complaints-within-a-week-through-the-singappenn-special-task-force#comments</comments><guid isPermaLink="false">6792cf34-53a6-4d9a-8121-50087a50bc4e</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:50:29 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:50:29.151Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை,Singapen Special Task Force</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5vyi9yd6/State-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5vyi9yd6/State-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மூலம் ஒரே வாரத்தில் 272 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><p>“தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாநிலம் முழுவதும் துரிதமான கள நடவடிக்கைகள் சமூக பங்களிப்புடன் கூடிய காவல் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.</p><p>கடந்த ஒரு வாரகாலத்தில் 14.08.2026 முதல் 20.08.2026 வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை மாவட்ட களப்பிரிவுகள் 272 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து 20 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், காணாமல் போன 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்ட 12,577 குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p> <p>இந்த காலகட்டத்தில், அறிவுசார் குறைபாடுடைய 5 நபர்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. 3 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டது. மேலும், 53 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். கடந்த வாரத்தின் போது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) களப்பிரிவுகள் சென்னை, திருநெல்வேலி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் பதிவான வழக்குகளுக்கு விரைவாகச் செயல்பட்டு, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (POCSO Act), தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் (TNPHW), பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita BNS), குழந்தைத் திருமண தடுப்புச்சட்டம்மற்றும்சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.</p> <p>இத்தகைய துரிதமான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தி வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, தமிழகத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.”</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நடிகை யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!</title><link>https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-yashika-anandhs-latest-clicks</link><comments>https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-yashika-anandhs-latest-clicks#comments</comments><guid isPermaLink="false">357d8bc7-0b63-4d7b-9ea3-bdcd2e633ff0</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:47:01 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:47:01.706Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>social media,யாஷிகா ஆனந்த்,Cinema Celebrities,Actress photoshoot,லேட்டஸ்ட் கிளிக்ஸ்,Actress Yashika Anand,லேட்டஸ்ட் போட்டோஷூட்</media:keywords><media:content height="700" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/tql1bkdm/fround.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/tql1bkdm/fround.jpg?w=280" width="280"></media:thumbnail><category>Webstories</category><content:encoded><![CDATA[ <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/1yoeig7l/w.jpg" /></figure><p>தமிழ் சினிமாவில் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் யாஷிகா ஆனந்த்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/n5xd30bj/w1.jpg" /></figure><p>‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/2n0arm5k/w2.jpg" /></figure><p>சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த், அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/zgxcsoye/w3.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/w3ge1qzc/w4.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/l0wu4fes/w5.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/brqw42g2/w6.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/yqrtdk8j/w7.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vrkiwkgi/w8.jpg" /></figure><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/brcsgv6j/w9.jpg" /></figure><a class="cta-anchor" href="https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-saithra-achar-latest-clicks" target="_blank" rel=""><span class="cta-text">நடிகை சைத்ரா ஆச்சரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!</span></a>]]></content:encoded></item><item><title>அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.26.5 லட்சம் மோசடி - அச்சக ஊழியர் கைது</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-scam-26-5-lakh-printing-employee-arrested</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/government-job-scam-26-5-lakh-printing-employee-arrested#comments</comments><guid isPermaLink="false">eab351ef-4629-422b-b610-fbe3fc0770e4</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:41:43 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:41:43.346Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,சென்னை,மோசடி,Duping,கொடுங்கையூர்,Kodungaiyur</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vn9jmcol/Untitled-2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vn9jmcol/Untitled-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.26.5 லட்சம் மோசடி செய்த அரசு அச்சக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>அரசு வேலை</h2><p>சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் முரளி (39 வயது). இவர், தொழிலாளர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இதை அறிந்த தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணிபுரியும் தாவீத் ராஜா (34 வயது) என்பவர், முரளியை தொடர்புகொண்டு, தனக்கும், நிதித்துறையில் பணிபுரியும் தனது தாயாருக்கும் பல அரசு அதிகாரிகளை தெரியும் என்றும், பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறினார்.</p><p>மேலும், முரளிக்கு கல்வித்துறையில் டிரைவர் பணியும், அவரது மனைவிக்கு லேப் டெக்னீசியன் பணியும் வாங்கி தருவதாக கூறினார். இதற்காக இருவருக்கும் தலா ரூ.6.5 லட்சம் வீதம் ரூ.13 லட்சம் கேட்டுள்ளார். இதை நம்பிய முரளி, 2 தவணைகளாக ரூ.13 லட்சத்தை தாவீத் ராஜாவிடம் கொடுத்தார்.</p><h2>ரூ.26.5 லட்சம் மோசடி</h2><p>இதையடுத்து, முரளியின் தம்பி சிவா மற்றும் அவரது மனைவிக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மேலும் ரூ.13.5 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், தாவீத் ராஜா சொன்னபடி யாருக்கும் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முரளி, இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.</p><p>விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தாவீத் ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும், மோசடி செய்த பணத்தில் பல்லாவரத்தில் நிலம் வாங்கியிருந்ததும் தெரிய வந்தது. அந்த நிலத்துக்கான பத்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான தாவீத் ராஜாவை சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டிஎன்பிஎல் - கோவைக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு</title><link>https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-dindigul-wins-toss-against-kovai-elects-to-bowl</link><comments>https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-dindigul-wins-toss-against-kovai-elects-to-bowl#comments</comments><guid isPermaLink="false">a0c9eb18-47fa-4bab-be30-f932e9aa642f</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:40:09 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:40:09.035Z</atom:updated><atom:author><atom:name>விளையாட்டுச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514347</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட்,TNPL,Dindigul Dragons,Kovai Kings</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/zdneixkg/sha.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டிஎன்பிஎல் - கோவைக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/zdneixkg/sha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டிஎன்பிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் கோவைக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. </p><h2>டிஎன்பிஎல் </h2><p>8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D">டிஎன்பிஎல் </a>கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. </p><p>இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.</p><h2>கோவை கிங்ஸ் - திருண்டுக்கல் டிராகன்ஸ்</h2><p>இந்நிலையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 25-து லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திருண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. </p><p>இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவகாரம்: வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர் :  துரைமுருகன் விமர்சனம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-controversy-for-mlas-mountain-road-driver-duraimurugan-slams-government</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/car-controversy-for-mlas-mountain-road-driver-duraimurugan-slams-government#comments</comments><guid isPermaLink="false">40d1cd89-b9d6-40c5-82a9-8fec277b0dc5</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:34:37 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:34:37.258Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கார்,விமர்சனம்,politics,டிரைவர்,மலைப்பாதை,எம்.எல்.ஏ.க்கள்,Duraimurugan,துரைமுருகன்,Reviews</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/rmdsvbi9/durai-murugan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவகாரம்: வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர் :  துரைமுருகன் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/rmdsvbi9/durai-murugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>எம்.எல்.ஏ.க்களுக்கு கார் விவகாரத்தில், "வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர்" என்று <a href="https://www.dailythanthi.com/topic/duraimurugan">திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்</a> விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p> <h2>பொது பார்வை</h2><p>நிர்வாகத்தில் வெளித்தோற்றமும் முக்கியமானது அதாவது, அரசியலில் செய்யப்படும் எந்த ஒரு செயலின் மீதான பொது பார்வை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக மிக முக்கியம். ஏனென்றால், முதல் பார்வையில் ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ, அதைத்தான் பெரும்பாலானோர் பிடித்துக்கொண்டு பேசுவார்கள். அது குறித்த தர்க்க நியாயங்களுக்குள் எல்லோரும் செல்வதில்லை என்பது நிர்வாக அனுபவம் உள்ளவர்களுக்கு புரியும்.</p><h2>மானிய கோரிக்கைகள்</h2><p>அதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்பதை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்ததும், அதற்கு எம்எல்ஏக்கள் வானளாவ புகழ்ந்ததும், பாட்டு பாடியதும். அதை தொடர்ந்து, அன்றைய தினத்தில் விவாதிக்கப்பட்ட ஏறத்தாழ மூன்று துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கு பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. </p> <h2>சிறந்த உதாரணம்</h2><p>அது நியாயமானதா, இல்லையா? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? எவ்வளவு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்? அதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரமும் பொருளாதாரமும் உயர்வதற்கான வாய்ப்புகள் எத்தனை? என்பதையெல்லாம் விவாதிக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து சுமார் 150 கோடி ரூபாய் செலவு வைக்கும் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் விஷயத்தை பேசுபொருளாக மாற்றிவிட்டார்கள்.</p><h2>சாதாரணமான ஒன்று</h2><p>அரசின் நிர்வாக செலவுகளில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது என்பது மிக மிக சாதாரணமான ஒன்று. அதுவும் குறிப்பாக வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வேளாண்மை அலுவலர் என வட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கும், வட்டார அளவிலான அரசியல் ஒன்றிய தலைவர்களுக்கும் கார் வழங்கப்பட்டிருக்கும் சூழலில், அரசின் அதிகாரப்பூர்வ வாகனம் எம்எல்ஏக்களுக்கு வேண்டும் என்பது ஒன்றும் நியாயமில்லாத கோரிக்கை அல்ல.</p><h2>தவெக அரசு</h2><p>அதுவும் இவ்வளவு பெரிய அரசு நிர்வாகத்தில், பட்ஜெட்டில் ஆண்டுக்கு சராசரியாக 30 முதல் 35 கோடி ரூபாய் என்பது ஒன்றும் பெரிய விஷயமும் அல்ல. ஏனென்றால், அரசின் மொத்த பட்ஜெட்டில் வீணாகும், விரயமாகும் செலவுகளே மிக எளிதாக 20 விழுக்காடு இருக்கக்கூடும். ஆனால், இதை ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்றும், தான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்ற மமதையிலும், நிர்வாக அடிப்படை புரிதலும் இல்லாமல், இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சரியான அதிகாரிகளை சரியான ஆலோசனைகளுடன் பயன்படுத்தாமலும்  இவ்வளவு சாதாரணமான ஒரு பிரச்சினையை பெரிய பேசுபொருளாக மாற்றி, சாணியை கரைத்து தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக அரசு</a>.</p> <h2>அரசாணையை வெளியிட்டிருப்போம்</h2><p>இந்த நிகழ்வை திமுக அரசு எப்படி கையாண்டிருக்கும்? ஒருவேளை எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், தெளிவாக முடிவு செய்திருப்போம். வழங்கலாம். ஆனால் நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் வாகனங்கள் வழங்கப்பட்டு, எம்எல்ஏக்கள் பொதுமக்களின் பணிகளை மேற்கொள்வதற்காக தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஓர் அரசாணையை வெளியிட்டிருப்போம்.</p> <h2> செயல்பட வேண்டும்</h2><p>அதற்கு பிறகு கொஞ்ச நாள் கழித்து, அந்த வாகனங்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எம்எல்ஏக்களிடம் ஒப்படைத்துவிட்டு, பிறகு ஓராண்டு கழித்து அதற்குரிய தொடர் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கி  சரியாக செய்திருப்போம். இப்படித்தான் பல விஷயங்களை செய்ய வேண்டும், செயல்பட வேண்டும்.</p> <h2>ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்</h2><p>ஏனென்றால், அரசியலில் என்ன செய்கிறோம் என்பதைவிட, அதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ‘ஒளியியல்’ மிக மிக முக்கியம். எடுத்துக்காட்டாக, இதன் பொருளாதார பின்னணி என்ன, இதன் செலவினம் என்ன, அரசின் மொத்த பட்ஜெட் என்ன என்பதையெல்லாம் சாதாரண மக்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை ‘கார்’ என்பது பெரிய விஷயம். தனக்கு கிடைக்காமல் மற்றவர்களுக்கு அரசிடமிருந்து அது கிடைப்பதை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.</p><h2>பயம் ஒன்றே ஒன்றுதான்</h2><p>இந்த புரிதல் இல்லாமல், சாதாரண ஒரு விஷயத்தை  சின்னாபின்னமாக்கியிருக்கிறது. நமக்கெல்லாம் இருக்கும் பயம் ஒன்றே ஒன்றுதான். ஒரு நிர்வாக அனுபவமும் இல்லாமல், எந்த புரிதலும் இல்லாமல், இவ்வளவு பெரிய வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை இவர்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம்.</p><h2>ஒப்படைத்திருக்கிறோம்</h2><p>மேல்நோக்கி செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டு தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி விரைந்து வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கி செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது. ஓட்ட தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்.</p><h2>யாரை நம்புவது</h2><p>அவரை சுற்றி நின்று ஓட்டுவதற்கு ஆலோசனைகள் சொல்கிறார்கள். சரியாக சொல்கிறார்களா, சரியாக சொல்லாமல் இருக்கிறார்களா, யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று தெரிந்துகொள்வதற்குள் ஐந்தாண்டுகள் முடிந்துவிடும். வண்டி பல நூறு கிலோமீட்டர் பின்னால் வந்துவிடும்.</p> <h2>மிகக்கடினம்</h2><p>இது ஒரு எளிதான ஒரு புரிதல்தான், செங்குத்தான வளர்ச்சி பாதையில் இறங்குவது மிக மிக சுலபம். ஏறுவது மிக மிகக்கடினம். நாம் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம். காலமே, நீ ஓர் அதிசய பெட்டகம்! என்னென்ன அதிசயங்களை வைத்திருக்கிறாயோ தெரியவில்லை!</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உயர்கல்வித்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியா-ரஷியா ஆலோசனை</title><link>https://www.dailythanthi.com/news/india/india-russia-consultations-on-strengthening-cooperation-in-the-higher-education-sector</link><comments>https://www.dailythanthi.com/news/india/india-russia-consultations-on-strengthening-cooperation-in-the-higher-education-sector#comments</comments><guid isPermaLink="false">8bc78985-be93-40aa-992e-d18fd55ab519</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:20:01 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:20:01.573Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,India,Russia,ரஷியா</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3egh9lp7/National-01.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/3egh9lp7/National-01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தேசிய செய்திகள் (National News)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் தீப்தி கவுர் முகர்ஜி மற்றும் ரஷிய அரசின் அறிவியல் மற்றும் உயர்கல்வித்துறை இணை மந்திரி மொகிலெவ்ஸ்கி கான்ஸ்டான்டின் இலிச் ஆகியோர் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரு தரப்பினரும் உயர்கல்வித்துறையில் பரஸ்பர முக்கியத்துவம் கொண்ட அம்சங்கள் குறித்து விவாதித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே உயர்கல்வித்துறை சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>கடந்த ஆகஸ்ட் 10-ந்தேதி மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட அதிகாரத்துவ மாற்றங்களின் ஒரு பகுதியாக தீப்தி கவுர் முகர்ஜி உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் பஞ்சாயத்து அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்ட வினீத் ஜோஷிக்கு பதிலாக இவர் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார்</title><link>https://www.dailythanthi.com/cinema/cinemanews/veteran-actress-sowcar-janaki-passes-away</link><comments>https://www.dailythanthi.com/cinema/cinemanews/veteran-actress-sowcar-janaki-passes-away#comments</comments><guid isPermaLink="false">f8505969-1eb2-4b40-8fc9-e426472f388b</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:17:02 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:17:02.209Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>passes away,காலமானார்,Sowcar Janaki,சவுகார் ஜானகி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ea9l96e4/2.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ea9l96e4/2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகை சவுகார் ஜானகிக்கு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4cdkdl4t/2a.jpg" /></figure><h2> </h2><p>தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும்   சவுகார் ஜானகியின் வயது 94. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p><h2>சவுகார் ஜானகி காலமானார்</h2><p>இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நடிகை சவுகார் ஜானகி காலமானார் </p><h2>400-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்த சவுகார் ஜானகி</h2><p>1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர்.</p><p>கடந்த 1950ஆம் ஆண்டு, ‘சவுகார்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான சவுகார்ஜானகி, 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சவுகார் ஜானகிக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/bail-petition-in-tasmac-corruption-case-police-ordered-to-respond</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/bail-petition-in-tasmac-corruption-case-police-ordered-to-respond#comments</comments><guid isPermaLink="false">a2214952-ba7e-450c-b1f9-d99850f683fb</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:12:22.337Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்டு,காவல்துறை,TNPolice,செந்தில் பாலாஜி,chennaihighcourt,TASMACCase,டாஸ்மாக்  முறைகேடு</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z9mlsx5f/madrashc33.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z9mlsx5f/madrashc33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கின் ஜாமீன் மனுவிற்கு  பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.</p><p>இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர், ஜாமீன் கோரி <a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டில் </a>மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுவிற்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரினார்.</p><p>மனுதாரர் தரப்பில், குதிரைபேர வழக்கில் ஜாமீன் பெற்று விடுதலையான நாளில், இந்த வழக்கில் கைது செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலையத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா தர்ணா; டெல்லியில் பரபரப்பு</title><link>https://www.dailythanthi.com/news/india/rahul-gandhi-and-priyanka-stage-a-sit-in-at-the-police-station-stir-in-delhi</link><comments>https://www.dailythanthi.com/news/india/rahul-gandhi-and-priyanka-stage-a-sit-in-at-the-police-station-stir-in-delhi#comments</comments><guid isPermaLink="false">08b2b2e4-b12f-47ce-8bd3-fe2b60319c10</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:10:08 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:10:08.842Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி,ராகுல் காந்தி,Rahul Gandhi,பிரியங்கா,Dharna,தர்ணா</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/i5qdjfyj/Rahul-gandhi.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/i5qdjfyj/Rahul-gandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தேசிய செய்திகள் (National News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்தும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று  தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடந்த மாதம்  21-ந் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட  போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக மாறியது.</p> <h2>சுப்ரீம் கோர்ட்டு</h2><p>அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடும் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்.அதே நேரத்தில், போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் போலீசார் தரப்பிலும் பலர் காயமடைந்தனர். மாணவர்கள் போராட்டத்தின்போது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்,   மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று  புகார் அளிப்பதற்காக  நாடாளுமன்ற வீதியில் உள்ள  காவல் நிலையத்திற்கு  வந்தார்.</p><h2>காவல் நிலையத்தில் தர்ணா</h2><p>இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக ராகுல் காந்தி புகார் அளித்தார். மேலும், போராட்டத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவரையும் அவர் தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.புகார் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி,  காவல்  நிலையத்திலேயே ராகுல் காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் தர்ணாவில் கலந்து கொண்டனர். இளைஞர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தர்ணாவால் அங்கு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>தரிகொண்ட வெங்கமாம்பா நினைவு நாள்.. திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு</title><link>https://www.dailythanthi.com/devotional/floral-tributes-to-matrusri-tarigonda-vengamamba-on-209th-death-anniversary</link><comments>https://www.dailythanthi.com/devotional/floral-tributes-to-matrusri-tarigonda-vengamamba-on-209th-death-anniversary#comments</comments><guid isPermaLink="false">515ec23a-9398-4d88-ac11-ef33365b3828</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:05:36 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:05:36.430Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>Aanmigam,Devotional,ஆன்மிகம்,Tirupati,திருப்பதி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/tklwuyyp/Vengamamba2.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ வெங்கமாம்பா நினைவு நாளில் மலரஞ்சலி]]></media:title><media:description type="html"><![CDATA[ தரிகொண்ட வெங்கமாம்பா நினைவு நாள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/tklwuyyp/Vengamamba2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பதி,</p><p>மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பாவின் நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.</p><p><a href="https://www.dailythanthi.com/topic/tirupati">திருப்பதி ஏழுமலையானின்</a> தீவிர பக்தையான துறவி கவிதாயினி தரிகொண்ட வெங்கமாம்பா, பகவானின் சிறப்புகளை போற்றி பல பாடல்களை இயற்றியவர். ஏழுமலையான் கோவிலில் முதல் முதலில் அன்னதானத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இவரது நினைவு தினத்தையொட்டி திருப்பதியிலும், திருமலையிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். </p><p>அவ்வகையில் தரிகொண்ட வெங்கமாம்பாவின் 209-வது நினைவு தினத்தையொட்டி நேற்றும் இன்றும் திருமலை <a href="https://www.dailythanthi.com/topic/tirupati">திருப்பதி</a> தேவஸ்தானத்தால் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. </p><p>இன்று, திருப்பதி எம்.ஆர்.பள்ளி சர்க்கிளில் உள்ள வெங்கமாம்பா உருவச்சிலைக்கு, தரிகொண்ட வெங்கமாம்பா திட்டத்தின் சிறப்பு அதிகாரி டாக்டர் வேமா வெங்கட ரத்னம் மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் <a href="https://www.dailythanthi.com/topic/worship">ஆரத்தி காண்பிக்கப்பட்டது</a>.</p><figure><img alt="தரிகொண்ட வெங்கமாம்பா நினைவு நாள் நிகழ்ச்சிகள்" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/zv30g39i/Vengamamba1.jpg" /><figcaption>தரிகொண்ட வெங்கமாம்பா திருவுருவச்சிலைக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.</figcaption></figure><h2>இசை நிகழ்ச்சி</h2><p>அன்னமாச்சார்யா கலையரங்கத்தில் இன்று காலை அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணி முதல் ஹரிகதா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.</p><p>இந்நிகழ்ச்சியில் வெங்கமாம்பா திட்டத்தின் உதவி நிர்வாக அதிகாரி அருணா குமாரி, கண்காணிப்பாளர் என்.சுசீலா, பிற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் டெல்லி பிரீமியர் லீக் - விக்கெட் எடுத்ததும் வீராங்கனை செய்த ‘67’ செலிப்ரேஷன்... வைரலாகும் வீடியோ</title><link>https://www.dailythanthi.com/sports/cricket/wdpl-2026-medhavi-bidhuris-67-celebration-goes-viral-after-dismissing-nishika-singh-in-season-opener</link><comments>https://www.dailythanthi.com/sports/cricket/wdpl-2026-medhavi-bidhuris-67-celebration-goes-viral-after-dismissing-nishika-singh-in-season-opener#comments</comments><guid isPermaLink="false">5fbcb6e6-1fd8-4ff0-89ec-23f4f87b3d6e</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:02:54 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:02:54.209Z</atom:updated><atom:author><atom:name>விளையாட்டுச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514347</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரிக்கெட்,மகளிர் டெல்லி பிரீமியர் லீக்,செலிப்ரேஷன்,மேதாவி பிதூரி,WDPL,Medhavi Bidhuri</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/jris20an/de.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மகளிர் டெல்லி பிரீமியர் லீக் (WDPL) தொடரின் தொடக்கப் போட்டியில், சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேதாவி பிதூரி விக்கெட் வீழ்த்திய பின்னர் செய்த வித்தியாசமான ‘67’ செலிப்ரேஷன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/jris20an/de.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><content:encoded><![CDATA[ <p>புதுடெல்லி,</p><p>மகளிர் டெல்லி பிரீமியர் லீக் (<a href="https://www.dailythanthi.com/sports/cricket">WDPL</a>) தொடரின் தொடக்கப் போட்டியில், சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேதாவி பிதூரி விக்கெட் வீழ்த்திய பின்னர் செய்த வித்தியாசமான ‘67’ செலிப்ரேஷன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2>வைரலான ‘67’ செலிப்ரேஷன்</h2><p>நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நடப்பு சாம்பியனான சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் - சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணிகள் மோதின.</p><p>இதில் சவுத் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது 16-வது ஓவரை மேதாவி பிதூரி வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் நிஷிகா சிங் அடித்த பந்தை ஆருஷி கோயல் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இந்த விக்கெட்டை  வீழ்த்தியதைத் தொடர்ந்து, மேதாவி பிதூரி தனது ஜெர்சியின் ‘67’ எண்ணை வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமான செலிப்ரேஷனை செய்தார்.</p><p>இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.</p><h2>சவுத் டெல்லி அணி வெற்றி</h2><p>இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது.  பின்னர் 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்ட்ரல் டெல்லி குயின்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><h2>செப்டம்பர் 2 வரை தொடர்</h2><p>மகளிர் டெல்லி பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் நேற்று முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறுகிறது. தொடரின் அனைத்து போட்டிகளும், புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகின்றன.</p><p>இந்நிலையில், முதல் போட்டியிலேயே மேதாவி பிதூரியின் ‘67’ செலிப்ரேஷனை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcRJ_CZymkL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcRJ_CZymkL/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? - டிடிவி தினகரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-hesitate-to-show-speed-in-farmers-welfare-like-buying-cars-ttv-dhinakaran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/why-hesitate-to-show-speed-in-farmers-welfare-like-buying-cars-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">b6c7db5a-3bca-47c6-8ca5-fa472bb48164</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:59:56 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:59:56.417Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Farmers,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,விவசாயிகள்,Crop loan,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/r4w4s8bv/Untitled-1.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/r4w4s8bv/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் குதிரை வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம்தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாத சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 134 கோடி ரூபாய் மதிப்பில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யால் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பு இன்று வரை வந்துசேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><p>குறுவை சாகுபடி மற்றும் அதனையொட்டி நடைபெறும் பணிகளுக்காக வழங்க வேண்டிய குறுவைத் தொகுப்பு, குறுவை சாகுபடியே முடிவடைந்து அறுவடை செய்யும் தருவாயிலும் வழங்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கு, ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>இயந்திரங்களின் மூலம் நடவு செய்ததற்கான ரசீதுகள் உட்பட அனைத்து ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து இரண்டு மாதங்கள் கடந்தும், விவசாயிகளுக்கான நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பின் நோக்கத்தையே சிதைக்கும் அளவிற்கான அவல நிலையை உருவாக்கியுள்ளது.</p><p>ஏற்கனவே, வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியையும் தவெக அரசு முழுமையாக நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில், சாகுபடிச் செலவு அதிகரிப்பு, இடுபொருட்களின் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது எனப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் விவசாயிகளுக்கு, குறுவைத் தொகுப்பையும் உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்துவது, விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.</p><p>எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இந்தக் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் அலட்சியம் காட்டாமல், அரசு அறிவித்த குறுவைத் தொகுப்பு முழுமையாகவும், உடனடியாகவும் விவசாயிகளைச் சென்றடையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, விவசாயிகளுக்கு அளித்த முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வாக்குறுதியையும் தாமதமின்றி நிறைவேற்றி, விவசாயிகளின் கடன் சுமையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சுரங்கங்கள் கனிமங்கள் சட்டத்திருத்தம் 2026: திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/mines-minerals-amendment-2026-withdrawal-demand-by-indian-communist-party</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/mines-minerals-amendment-2026-withdrawal-demand-by-indian-communist-party#comments</comments><guid isPermaLink="false">c2525773-07ec-45bf-a169-9c4b66319063</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:57:10.043Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,தமிழ்நாடு அரசு,வலியுறுத்தல்,CPI,கனிமங்கள்,Minerals,withdrawal,Urges</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0uzqhb0b/veerapandiyan.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சுரங்கங்கள் கனிமங்கள் சட்டத்திருத்தம் 2026: திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/0uzqhb0b/veerapandiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ மத்திய அரசு  திரும்ப பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது தொடர்பாக,<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்</a> மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-</p><h2>சட்டத்திருத்தம்</h2><p>மாநில உரிமைகளைப் பறித்து பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க வழிவகுக்கும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சுரங்கங்கள் மற்றும் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">கனிமங்கள்</a> மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.</p> <h2>நிதி உரிமைகளை பறிக்கும் மத்திய அரசு</h2><p>இந்த சட்டத்தின் மூலம் கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உள்ள வரி, செஸ்  மற்றும் பிற வருவாய் அதிகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது. இச்சட்டத்திருத்தம் மாநிலங்களின் வருவாய் உரிமையை பறிப்பதுடன் நிதி சுயாட்சியையும் கடுமையாக பாதிக்க செய்யும்.</p><h2>அமைப்புச்சட்டம்</h2><p>இச்சட்டம் வெறும் கனிம வளம் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல, அரசியல் அமைப்புச்சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களையும், நிதி உரிமைகளையும் படிப்படியாக பறிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.</p><h2>இயற்கை வளங்கள்</h2><p>இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் பெரு நிறுவனங்களுக்கு இச்சட்டத்திருத்தம் வாய்ப்பளிக்கும். இயற்கை வளங்களை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் மையப்படுத்த இச்சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது.</p> <h2>முக்கிய இலக்கு</h2><p>2026 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, அரியவகை கனிமங்களின் உலகளாவிய விநியோக சங்கிலி அதற்கான முதலீடு மற்றும் கடல்சார் வளங்களை வேகமாக பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய இலக்குகளாக அறிவித்தார். இதற்கு சில நாட்களுக்கு முன்பே, ஆகஸ்ட் 12 அன்று மக்களவையும், ஆகஸ்ட் 13 அன்று மாநிலங்களவையும் இந்த சட்டத்திருத்த மசோதா 2026-ஐ நிறைவேற்றியுள்ளன.</p><h2>கொள்ளை லாபம்</h2><p>உச்சநீதிமன்றத்தின் 2024-ஆம் ஆண்டு தீர்ப்பு, மாநிலங்களுக்கு உள்ள கனிம உரிமைகள் தொடர்பான வரி அதிகாரத்தை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இத்தகைய சட்ட கட்டுப்பாட்டை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வருவது, மாநிலங்களின் அதிகாரத்தை நயவஞ்சகத்தை சட்டத்தின் மூலம் குறைக்கும் செயலாகும்.</p> <h2> பாதிப்படைய செய்யும்</h2><p>கனிம வளம் நிறைந்த மாநிலமான தமிழ்நாட்டின் வருவாயை மிகப்பெரிய அளவிற்கு இச்சட்டத்திருத்தம் பாதிக்கும். மாநில இயற்கை வளங்கள் மீது கொள்கைரீதியான முடிவெடுக்கும் உரிமையையும், கனிம வளங்களிலிருந்து கிடைக்கும் வருவாயை மாநில மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் பொருளாதார மற்றும் நிதிசார் தன்னாட்சியையும் இச்சட்டத்திருத்தம் பாதிப்படைய செய்யும்.</p> <h2>பொது சொத்து</h2><p>கனிம வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான லாபத்திற்கானது அல்ல; அவை இயற்கையான மக்களின் பொது சொத்து ஆகும். அவற்றின் பயன்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், உள்ளூர் மக்களின் உரிமைகள், மாநில நலன் மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.</p><p>பாரம்பரிய உரிமைகளை பாதிக்கும்</p><p>இச்சட்டம் பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழும் மக்களின் நிலம், வாழ்வாதாரம், பாரம்பரிய உரிமைகளை பாதிக்கும். இயற்கை வளங்களின் மீதான அவர்களின் உரிமைகளை பாதிக்கும். குறிப்பாக வன உரிமைகள், சட்டம் 2006 வழங்கும் சமூக மற்றும் தனி நபர் வன உரிமைகள், கிராம சபையின் ஒப்புதல் மற்றும் பங்கேற்பு ஆகியவற்றை பாதுகாக்காமல், சுரங்க திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனங்களில் வாழும் மக்களின் அரசியலமைப்பு சட்டரீதியான உரிமைகளுக்கும், வாழ்வாதார பாதுகாப்பிற்கும் எதிரானதாகும் எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். இச்சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“ஸ்பிரிட்” படத்திலிருந்து தீபிகா படுகோனை நீக்கியது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்</title><link>https://www.dailythanthi.com/cinema/cinemanews/why-was-deepika-padukone-removed-from-the-film-spirit-producer-explains</link><comments>https://www.dailythanthi.com/cinema/cinemanews/why-was-deepika-padukone-removed-from-the-film-spirit-producer-explains#comments</comments><guid isPermaLink="false">582e7037-f087-4ff0-b9ac-3bc24ed90269</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:52:55 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:52:55.114Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>Prabhas,பிரபாஸ்,Deepika Padukone,Spirit,Tripti Dimri,திரிப்தி டிம்ரி,ஸ்பிரிட்,தீபிகா படுகோனே</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/dghektss/1.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/dghektss/1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகை தீபிகா படுகோனை ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து நீக்க பல்வேறு காரணங்கள் இருந்ததாக தயாரிப்பாளர் பிரணய் வங்கா பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.</p><figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ikzxd2bs/1b.jpg" /></figure><p>நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்பிரிட்’. இந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.</p><p>இந்தப் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பாக சந்தீப் வங்காவின் சகோதரர், டி சீரிஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள். பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுடன், கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க தொடக்கத்தில் தீபிகா படுகோன் தேர்வாகி இருந்தார். பின்னர் அவரது அதிகப்படியான நிபந்தனைகளால் அவர் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் தீபிகா படுகோனுக்குப் பதிலாக ‘அனிமல்’ படத்தில் கவனம் பெற்ற திரிப்தி டிம்ரி தேர்வானார்.  படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.</p> <figure><img alt="" src="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/7ql1ynpp/1a.jpg" /></figure><h2>‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து நீக்க  காரணம்</h2><p>இந்த நிலையில், ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து நீக்க பல்வேறு காரணங்கள் இருந்ததாக தயாரிப்பாளர் பிரணய் வங்கா விளக்கம் அளித்துள்ளார். அதில்  “நடிகை தீபிகா படுகோன் நடிப்பு பிடித்ததாலேயே அவரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம். அவருடன் ஓராண்டாகவே சந்தீப் பேசி வந்தார். நல்ல உறவிலும் இருந்து வந்தார். திடீரென அவர் அதிகமான சம்பளத்தைக் கேட்கிறார். பின்னர், குறைவான நேரம் மட்டுமே நடிப்பேன் என்கிறார். அடுத்ததாக, படத்தின் வெற்றியில் 10 சதவிகிதம் வேண்டும் என்கிறார். தீபிகாவின் நடவடிக்கைகள் சந்தீப்பிற்கு பிடிக்காததால் அவரை படத்தில் இருந்து நீக்கினார்” என்றார். </p><h2>‘கல்கி 2898 ஏடி’ படத்திலிருந்து நீக்கம்</h2><p>பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர பணி இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இக்கோரிக்கையால் அவர்  ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை, அதிக சம்பளம், மற்றும் படத்தின் லாபத்தில் பங்கு உள்ளிட்ட அவரது கோரிக்கைகளால் படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.</p><p>பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, தற்போது நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘கிங்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் திரைக்கு வர உள்ளது. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘ராக்கா’ படத்தில் தீபிகா படுகோனே நடித்துவருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய பங்குச்சந்தையில் பேங்க் நிப்டி ஏற்றம்: இன்றைய நிலவரம் 

</title><link>https://www.dailythanthi.com/business/bank-nifty-rally-in-indian-stock-market-todays-status</link><comments>https://www.dailythanthi.com/business/bank-nifty-rally-in-indian-stock-market-todays-status#comments</comments><guid isPermaLink="false">f3692ee1-9964-46ed-b843-0f8e9652aa63</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:43:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:43:57.364Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>பங்குச்சந்தை,stock market</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/d2xlqm7s/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/d2xlqm7s/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[  <p>மும்பை,</p><p>இந்திய பங்குச்சந்தையில் பேங்க் நிப்டி இன்று (21-08-2026 - வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. </p><h2> பங்குச்சந்தை </h2><p>அதன்படி, 4  புள்ளிகள் சரிந்த <a href="https://www.dailythanthi.com/">நிப்டி </a>24 ஆயிரத்து 225 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 139 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 631 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .</p><p>27 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 26 ஆயிரத்து 232 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 31 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 506 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.</p><p>31 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 844 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 204 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 309 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.  </p>  ]]></content:encoded></item><item><title>குஜராத்தில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு</title><link>https://www.dailythanthi.com/news/india/death-toll-from-illicit-liquor-in-gujarat-rises-to-7</link><comments>https://www.dailythanthi.com/news/india/death-toll-from-illicit-liquor-in-gujarat-rises-to-7#comments</comments><guid isPermaLink="false">c324c72c-b57c-4a86-aa4a-925be6e2fa21</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:43:24 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:43:24.492Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,Gujarat,கள்ளச்சாராயம்,illicit liquor</media:keywords><media:content height="432" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4ahwywq6/15.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/4ahwywq6/15.gif?w=280" width="280"></media:thumbnail><category>தேசிய செய்திகள் (National News)</category><content:encoded><![CDATA[ <p>ஆமதாபாத்,  </p><p> குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. மதுபானம் தயாரித் தல், விற்பனை செய்தல், குடித்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மதுவிலக்கு</h2><p>இதற்கிடையே, குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம் காராகடி கிராமத் தில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், கள்ளச்சாராயம் அருந்திய 5 நண்பர் கள், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். இதுபற்றி மாவட்ட அதிகாரிக ளுக்கு தகவல் கிடைத்தது. 5 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நச்சுத்தன்மைவாய்ந்த, ரசாயனம் கலந்த மது அருந்தியதால் தற்செயலாக ஏற்பட்ட மரணம் என்று போலீசார் வழக் குப்பதிவு செய்தனர்.</p><p>பின்னர், பக்கத்து கிராமங்களிலும் கள்ளச்சாராயம் குடித்த பலர் அடுத்த டுத்து நோய்வாய்ப்பட்டனர். அதனால் சாவு எண்ணிக்கை நேற்று 7 ஆக உயர்ந்தது. மேலும் 30 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் பிரபல மது நிறுவனத்தின் போலி பாட்டில்களில் நிரப்பப்பட்டு விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில், மத்தியப்பிரதேசத்தில் இருந்து அந்த பாட்டில்கள் வந்திருப்பது தெரிய வந்தது.</p><p>குறிப்பாக எங்கிருந்து வந்தது? எங்கு தயாரிக்கப்பட்டது, பாவ்நகருக்கு யார் அனுப்பியது என்று போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 21 மது வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>தொழில்நுட்ப கோளாறு: இண்டிகோ விமான டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல்

</title><link>https://www.dailythanthi.com/news/india/indigos-ticket-booking-system-faces-issues-briefly</link><comments>https://www.dailythanthi.com/news/india/indigos-ticket-booking-system-faces-issues-briefly#comments</comments><guid isPermaLink="false">4b99d65a-a7e1-460b-b6bf-4bc8ed1d0594</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:36:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:36:46.636Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>plane,விமானம்,IndiGo,இண்டிகோ</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/c7vsk59v/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/c7vsk59v/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தேசிய செய்திகள் (National News)</category><content:encoded><![CDATA[  <p>டெல்லி,</p><p>இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் <a href="https://www.dailythanthi.com/">இண்டிகோ</a>. இந்த விமான நிறுவனம் தினமும் சராசரியாக 2,200 உள்நாடு, வெளிநாட்டு விமான சேவைகளை இயக்கி வருகிறது.</p><h2>டிக்கெட் முன்பதிவு - தொழில்நுட்ப கோளாறு </h2><p>இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக  இண்டிகோ விமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இன்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட் முன்பதிவு பிரிவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. </p><p>இதனால், வாடிக்கையாளர்கள் பயண டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் முயற்சியில் இண்டிகோ விமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.  </p>]]></content:encoded></item><item><title>திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-thiruvananthapuram-to-velankanni</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-thiruvananthapuram-to-velankanni#comments</comments><guid isPermaLink="false">0c5fcd98-8715-424a-b66d-acb463e086c3</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:29:09 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:29:09.623Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு ரெயில்,Special train,Velankanni,வேளாங்கண்ணி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ox42ncpc/train.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/ox42ncpc/train.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை,  </p><p>வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வே சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை, மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06115) திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 5-ந் தேதி ஆகிய நாட்களில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையம் சென்றடைகிறது. </p><p>மறுமார்க்கத் தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06116) வருகிற 30-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந் 1 தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட் டிருக்கும். ரெயில், நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். </p> ]]></content:encoded></item><item><title>5 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்</title><link>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-5-districts-over-the-next-3-days-starting-today-weather-update</link><comments>https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-5-districts-over-the-next-3-days-starting-today-weather-update#comments</comments><guid isPermaLink="false">c8b12d04-0fd2-4e48-b15f-305f41b20d7a</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:27:54 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:27:54.558Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Chennai,சென்னை,Rain,Weather,கனமழை,வானிலை,தமிழகம்,Weather News,WeatherUpdate,மழை,வானிலை செய்திகள்,வானிலை நிலவரம்,weather forecast,வானிலை ஆய்வு மையம்,கன மழை,வானிலை அறிக்கை,weather condition,Weather Report,வானிலை முன்னறிவிப்பு,வானிலை அறிவிப்பு,weather update news,TN Rain,வானிலை அப்டேட்</media:keywords><media:content height="450" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/mb96fqkg/kloere.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain, மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/mb96fqkg/kloere.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வானிலை செய்திகள் (Weather)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>வரும் 24-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை</h2><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக <strong>இன்று (21-08-2026) முதல் 23-08-2026 வரை:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும். </p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>கனமழை</h2><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் <a href="https://www.dailythanthi.com/topic/rain">கனமழை</a> பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><p><strong>26-08-2026 மற்றும் 27-08-2026:</strong> மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான <a href="https://www.dailythanthi.com/topic/rain">மழை</a> பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:</h2><p><strong><ins>24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:</ins></strong></p><p><strong>21-08-2026 முதல் 23-08-2026 வரை:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.</p><p><strong><ins>இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:</ins></strong> </p><p><strong>21-08-2026 முதல் 23-08-2026 வரை:</strong> உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p><strong>24-08-2026 மற்றும் 25-08-2026:</strong> தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:</h2><p><strong>இன்று (21-08-2026) மற்றும் நாளை (22-08-2026):</strong> வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</h2><p><strong><ins>தமிழக கடலோரப்பகுதிகள்:</ins></strong></p><p><strong>21-08-2026:</strong> தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-08-2026 முதல் 25-08-2026 வரை:</strong> தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>வங்கக்கடல் பகுதிகள்:</ins></strong></p><p><strong>21-08-2026:</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>22-08-2026 முதல் 25-08-2026 வரை :</strong> தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong><ins>அரபிக்கடல் பகுதிகள் :</ins></strong></p><p><strong>21-08-2026 மற்றும் 22-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>23-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>24-08-2026:</strong> கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p><strong>25-08-2026:</strong> மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/provide-the-kuruvai-package-to-delta-farmers-immediately-nainar-nagendran</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/provide-the-kuruvai-package-to-delta-farmers-immediately-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">79118d8d-4b6c-4f42-8d6a-fabe496c3529</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:23:39.887Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Nainar Nagendran,நயினார் நாகேந்திரன்,நிதி,டெல்டா விவசாயிகள்,குறுவைத் தொகுப்பு,Delta farmers</media:keywords><media:content height="450" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xwg7t53z/nainar.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xwg7t53z/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>தமிழக பாஜக தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>குறுவை சாகுபடி செய்யும் டெல்டா விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், ரூ.134.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், இதுவரை ஒரு பைசா கூட விவசாயிகளின் கைக்கு வந்து சேரவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.</p><h2>குறுவை தொகுப்பு நிதி</h2><p>குறுவை தொகுப்புத் திட்டத்துக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கிவிட்டதாகச் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், களநிலவரமோ முற்றிலும் வேறாக உள்ளது. இயந்திர நடவு ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், இதுவரை நிதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் குமுறி வருகின்றனர்.</p><p>அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இனியும் காகித அறிவிப்புகளால் காலத்தைக் கடத்தாமல், குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்; ‘யாரையும் நம்ப முடியவில்லை’ எனவும் பேச்சு

</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-takes-bribe-from-farmer-says-cant-trust-anyone</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/surveyor-takes-bribe-from-farmer-says-cant-trust-anyone#comments</comments><guid isPermaLink="false">e7c430a0-0232-43d7-bb3f-343337135431</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:22:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:22:06.788Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Pudukkottai,புதுக்கோட்டை,லஞ்சம்,bribe</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/awo48z2v/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/awo48z2v/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[  <p>புதுக்கோட்டை,</p><p><a href="https://www.dailythanthi.com/">புதுக்கோட்டை </a>மாவட்டத்தில் விவசாயியிடம் சர்வேயர்  லஞ்சம் வாங்கிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. </p><p>புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே ராயவயல் கிராமத்தை சேர்ந்தவர் உருமையா. இவர் தனது மனைவி பெயரில் உள்ள விவசாய இடத்தை பட்டாவில் உட்பிரிவு செய்ய புத்தாம்பூர் சர்வேயர் எழில்கொடியை அனுகியுள்ளார். </p> <h2>லஞ்சம்</h2><p>அப்போது, வேலையை முடிக்க லஞ்சம் தருமாறு சர்வேயர் எழில்கொடி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஏற்கனவே சர்வேயர் எழில்கொடிக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக உருமையா கொடுத்துள்ளார்</p><p>இந்நிலையில், பட்டாவில் உட்பிரிவு வேலையை முடித்து தர கூடுதலாக ரூ. 2 ஆயிரம் தருமாறு சர்வேயர் எழில்கொடி லஞ்சம்  கேட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>யாரையும் நம்ப முடியவில்லை என பேச்சு</h2><p>விவசாயி உருமையாவிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட வீடியோவில் சர்வேயர் எழில்கொடி பேசியதாவது;-</p><p>சீக்கிரம் வேலை முடியாது. எவ்வளவு நாளில் வேலை முடியும் என்றும் தெரியாது. செல்போன்களை எடுத்து வைத்துவிடுங்கள். யாரையும் நம்ப முடியவில்லை. நமது கையை கூட நம்மால் நம்ப முடியவில்லை. நீங்கள் எவ்வளவு கொடுப்பீர்களோ கொடுங்கள். ரூ. 1,000 எல்லாம் போதாது... ரூ. 2,000 கொடுங்கள்...</p><p>எனக்கு ஜிபே கிடையாது.  வீட்டில் உள்ளவர்கள் ஜிபே எண்ணுக்கும் பணம் அனுப்ப வேண்டாம்.  ஜிபேயில் நான் யாருக்கு மாற்றுவது.  யாரையும் நம்ப முடியவில்லை. காலம் மோசமான காலமாக உள்ளது. </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>  <figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே விவசாயி ஒருவரின் இடத்தை உட்பிரிவு செய்ய சர்வேயர் உதவியாளர் மூலம் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.<br><br>புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே ராயவயல் கிராமத்தைச் சேர்ந்த உருமையா என்பவர் தனது மனைவி… <a href="https://t.co/Rlb7osV4ZY">pic.twitter.com/Rlb7osV4ZY</a></p>&mdash; ஜெயராமன் திமுக (@jayaraman418) <a href="https://x.com/jayaraman418/status/2090614451141804061?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>17 வங்காளதேச ஊடுருவல்காரர்கள் அசாமில் தடுத்து நிறுத்தம்</title><link>https://www.dailythanthi.com/news/india/17-bangladeshi-infiltrators-arrested-in-assam</link><comments>https://www.dailythanthi.com/news/india/17-bangladeshi-infiltrators-arrested-in-assam#comments</comments><guid isPermaLink="false">993b6d33-119e-4d5f-8142-c2edfe1bc352</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:16:41 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:16:41.903Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>அசாம்,Assam,ஊடுருவல்காரர்கள்,Infiltrators</media:keywords><media:content height="432" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qg0fg9qt/13.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/qg0fg9qt/13.gif?w=280" width="280"></media:thumbnail><category>தேசிய செய்திகள் (National News)</category><content:encoded><![CDATA[ <p>திஸ்பூர்,</p><p>வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாம் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்ற 17 பேரை அசாம் போலீசார் அடையாளம் கண்டு திருப்பி அனுப்பினர். இத்தகவலை அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-</p><p>'சட்டரீதியாக வருபவர்களுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால், சட்டவிரோதமாக நுழைய முயற்சித்தால், அவர்களை திருப்பி அனுப்புவதுதான் ஒரே வழி.'</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருவாரூரில் கனமழை: அறுவடைக்குத் தயாரான 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tiruvarur-500-acres-of-harvest-ready-paddy-crops-submerged-and-damaged</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/heavy-rain-in-tiruvarur-500-acres-of-harvest-ready-paddy-crops-submerged-and-damaged#comments</comments><guid isPermaLink="false">df011d92-27c2-431d-81ee-c5ca4349b89f</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:16:18 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:16:18.194Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவாரூர்,heavy rain,damaged,Paddy crops,நெற்பயிர்கள் சேதம்,இழப்பீடு கோரி</media:keywords><media:content height="422" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bbskrh4h/31.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ நெற்பயிர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்தன.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/bbskrh4h/31.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர்,</p><p>திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நெற்பயிர்கள்</a> மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.</p><h2>பயிர்கள் நாசம்</h2><p>டெல்டா மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் இந்த திடீர் மழையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், எரவாஞ்சேரி, வெள்ளை, அதம்பார் மற்றும் ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதில் கதிர்கள் முற்றி, இன்னும் சில நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் சாய்ந்து மூழ்கின.</p><h2>விவசாயிகள் வேதனை</h2><p>"பயிர்களைக் காக்க கடுமையான உழைப்பையும் முதலீட்டையும் கொட்டிய நிலையில், அறுவடை நேரத்தில் பெய்த இந்த மழை மொத்த உழைப்பையும் வீணடித்துள்ளதாக" அப்பகுதி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">விவசாயிகள்</a> கண்ணீருடன் தெரிவித்தனர். தேங்கியுள்ள மழைநீரை வடிக்க வழியின்றி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.</p><h2>உடனடி இழப்பீடு கோரிக்கை</h2><p>பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்மை மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக நேரில் பார்வையிட்டு, சேத விபரங்களை துல்லியமாகக் கணக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81">உரிய இழப்பீடு</a>, விரைவில் வழங்கி உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை: சட்டசபையில் அனல் பறந்த விவாதம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-heated-debate-in-the-assembly</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">72035c0f-2cf6-413b-9fa3-b153653a53c3</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:15:56 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:15:56.229Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,TVK,தவெக,பாஜக,BJP,பாமக,PMK,அதிமுக,திமுக,DMK,சட்டசபை,TN Assembly,Delimitation of Constituencies,தொகுதி மறுவரையறை,Delimitation,Fair Delimitation</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vsrmdkqv/CHENNAI-14.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/vsrmdkqv/CHENNAI-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தொகுதி மறுவரையறை தீர்மானம் குறித்து சட்டசபையில் அனல் பறந்த விவாதம் நடந்தது.</p><h2>பொதுப்பணித்துறை அமைசர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-</h2><p>"தொகுதி மறுவரையறை குறித்து சில ஊடகங்களும், சில கட்சிகளும் தவறான கண்ணோட்டத்தோடு செய்தி வெளியிட்டுள்ளன. 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முதல்-அமைச்சரும் அரசும் உறுதியாக இருக்கின்றனர். Fair Delimitation தேவையில்லை.. Freeze Delimitationதான் தேவை" என்றார்.</p><p><strong>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,</strong> "தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் பேசிய உரை குறித்து அமைச்சர் பேசினார். 543 எம்பிக்கள் என்ற எண்ணிக்கையில் வேண் இருக்க வேண்டும் என்றுதான் தீர்மானத்தில் உள்ளது. அந்த தீர்மானத்தைத்தான் பேரவையில் நிறைவேற்றியுள்ளோம். முதலமைச்சர்கள் மாநாட்டில் 543 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் பேசவில்லை" என்று கூறினார்.</p><p><strong>இதற்கு பதிலளித்த அமைசர் ஆதவ் அர்ஜுனா,</strong> "திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது எம்.பிக்கள் எண்ணிக்கை உயர்த்த கூடாது என நகல் எரித்து போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் மசோதா வரும் போது திமுக வெளிநடப்பு செய்யக்கூடாது. வாஜ்பாய் கொண்டு வந்தது போன்று சிறப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். புறக்கணித்தால் அதுவும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும்.</p><p>தமிழ்நாட்டில் கோரிக்கை வைத்த நீட் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மத்திய அரசு, கோரிக்கையே வைக்காத போது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்றால் அதில் கண்டிப்பாக அரசியல் இருக்கும்” என்றார்.</p><p><strong>தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,</strong> "தொகுதி மறுவரையறை என்பது சட்டம். தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கை கூட வேண்டுமா? குறைய வேண்டுமா? அதை தெளிவுபடுத்துங்க"என்றார்.</p><p><strong>இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா,</strong> "மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின் சிறப்பு சட்டத்தை வாஜ்பாய் கொண்டு வந்தார். அதை கொண்டு வர, உங்கள் எம்பி.,கள் உள்ளிட்டோர் குரல் கொடுங்கள், அது தான் எங்கள் கோரிக்கை" என்றார்.</p><p><strong>திமுகவின் நிலைப்பாடு மாறுவதாக பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு பாமக கணேஷ்குமார் பதில் அளித்து கூறுகையில்,</strong> 7.18%க்கு குறையாமல் இருந்தால் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதாக தவெகவும் கூறியது; முந்தைய திமுக ஆட்சியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் பங்கேற்றார். திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெகவும் கையெழுத்திட்டது; தவெகவும், காங்கிரஸும் Fair Delimitation எனக் கூறிவிட்டு இப்போது நிலைப்பாட்டை மாற்றுகின்றன’ என்றார்.</p><p><strong>பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் கூறியதாவது,</strong> “தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு நல்லது. 50% உயர்வு என வரும்போது தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயரும்; தமிழக எம்பிக்களின் எண்ணிக்கையை 39-லிருந்து 59 ஆக உயர்த்தும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.</p><p>தொகுதி மறுவரையறையில் அமித்ஷா மாற்றி மாற்றி பேசுகிறார் என்று <strong>அமைச்சர் வன்னி அரசு</strong> தெரிவித்தார். மேலும் ”பா.ம.க நண்பர்கள் ராமதாஸை காப்பாத்துறத விட மோடி அமித்ஷாவை காப்பாத்துறதுல தான் குறியா இருக்கீங்க” என அவர் கூறினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.</p><p>இவ்வாறு தொகுதி மறுவரையறை தொடர்பாக த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க., பாமக, பாஜக உறுப்பினர்கள் மாறி மாறி தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் விவாதம் அனல் பறந்தது.</p>]]></content:encoded></item><item><title>தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்: மார்க்சிஸ்ட் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்..!</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-secretary-unfit-to-continue-in-office-marxist-party-to-stage-protest-tomorrow</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-secretary-unfit-to-continue-in-office-marxist-party-to-stage-protest-tomorrow#comments</comments><guid isPermaLink="false">8336d373-50b2-4230-9b01-76a7bb0ce48c</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:14:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:14:06.596Z</atom:updated><atom:author><atom:name>அரசியல் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514316</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,ஆர்ப்பாட்டம்,Chief Secretary,Marxist Communist,பெ.சண்முகம்,Marxist Communist Party,தலைமை செயலாளர்,மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி,p shanmugam,மார்க்சிஸ்ட் கட்சி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/lh6c710m/shanmugam.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/lh6c710m/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>தமிழகம் முழுவதும்  நாளைய தினம் (22.08.2026) அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-</p><h2>இடதுசாரிகள் குறிவைப்பு</h2><p>இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறிவைத்ததன் மூலம் தலைமை செயலாளரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டு நிற்கிறது. அரசு எந்திரத்தை அவரது நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் எல்லைக்கு அவர் சென்றிருக்கிறார். நியாயமான நிர்வாகத்தை இனிமேலும் அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. கடிதத்தின் 'பொருள்' இடதுசாரி இயக்கங்கள் குறித்து இருந்தாலும், உள்ளடக்கத்தில், மாணவர்களின் போராட்ட உரிமைகளையே அடக்கி ஒடுக்கும் எதேச்சதிகார மனோபாவமே அதில் பிரதிபலிக்கிறது. இது மிக ஆபத்தானது. மத்திய அரசின் பாணியை அடியொற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. இது முதல்-அமைச்சரின் அனுமதியுடன் நடந்ததா என்கிற கேள்வி எழுகிறது.</p><p>கல்லூரி கல்வி இயக்குனர் தம் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தின் முடிவும், அதனை அறிவுறுத்தி தமிழக அரசின் சிறப்பு செயலாளர் அனுப்பிய கடிதமும் நீடிக்கின்றன. உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்ககம் தவிர, மற்ற இயக்ககங்களோ, பல்கலைக்கழகங்களோ இந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை என்று பத்திரிக்கைக்குக் கூறியிருப்பதாக தகவல் உள்ளது. ஆனால், தமிழக அரசின் சிறப்பு செயலாளரின் கடிதம், கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவையும் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. 'டாப் பிரையாரிட்டி, மோஸ்ட் இம்மீடியட்' என்ற வார்த்தைகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்த அறிக்கை (action taken report) கோரப்பட்டுள்ளதானது, எவ்வளவு தீவிரத் தன்மையுடன் திட்டமிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. எனவே, கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே தவறு செய்தது என்பது உண்மையல்ல. எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.</p><h2>விளக்கம் வேண்டும்</h2><p>இப்பிரச்சனை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கமானது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். கல்வி வளாக அமைதி மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் தான் இருக்கிறதா என அவர் விளக்க வேண்டும். சில வார்த்தைகள் தவறாக வந்துவிட்டன என்கிறார். மொத்த உள்ளடக்கமே மோசமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் பிரச்சனையிலும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர், நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் குறிப்பு, பயிற்சி முடிந்து விட்டதால் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியில் சேர்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறது. பயிற்சி முடிந்த பின் விடுவிக்கப்பட்டு, வேறு பணியில் சேர்வதற்கு பெயர், தவெக ஆட்சியில், நடவடிக்கையா?</p><h2>நாளை கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>அடுத்தடுத்து <a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">இடதுசாரிகள் </a>குறிவைக்கப்படுவதைத் தற்செயலானது என எடுத்துக் கொள்ள முடியாது.</p><p>* தமிழக முதல்வரும் அரசும் தம் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>* தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>* குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்</p><p>என வலியுறுத்தி நாளைய தினம் (22.08.2026) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>
ஓடிடியில் வெளியாகும் டாப்ஸி பன்னு நடித்த &apos;காந்தாரி&apos;.. எதில், எப்போது பார்க்கலாம்? </title><link>https://www.dailythanthi.com/cinema/ott/taapsee-pannus-gandhari-to-release-on-ott-where-and-when-can-you-watch-it</link><comments>https://www.dailythanthi.com/cinema/ott/taapsee-pannus-gandhari-to-release-on-ott-where-and-when-can-you-watch-it#comments</comments><guid isPermaLink="false">8da15f9d-b991-4dd2-9c67-1afebec3d24c</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:13:30 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:13:30.926Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>OTT,ஓடிடி,Taapsee Pannu,Gandhari,டாப்ஸி பன்னு,காந்தாரி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5lmbmtyo/12.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/5lmbmtyo/12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஓ.டி.டி. (OTT)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>நடிகை டாப்ஸி பன்னு நடிப்பில் உருவாகியுள்ள ‘காந்தாரி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 3-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரபல இயக்குனர் தேவாஷிஷ் மகிஜா இயக்கியுள்ளார். </p> <h2>மனதை கொள்ளை கொண்ட டாப்ஸி பன்னு</h2><p>தமிழில் வெளிவந்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் டாப்ஸி பன்னு. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது 2 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்த வருகிறார்.</p> <h2>அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டாப்ஸி</h2><p>தற்போது, கற்பனையான ஜெய்புரா என்ற நகரத்தை பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், பானி என்ற கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். தனது மகளைத் தேடி செல்லும் அவரது பயணம் பல்வேறு ஆபத்துகளையும் எதிர்பாராத சவால்களையும் சந்திப்பதாக கதை அமைந்துள்ளது. ‘காந்தாரி’ படத்தை தேவாஷிஷ் மக்கிஜா இயக்கியுள்ளார். கனிகா தில்லான் இப்படத்தை எழுதி தயாரித்துள்ளார்.</p><p>இப்படத்தில் இஷ்வாக் சிங், சாயா கடம், ஸ்வஸ்திகா முகர்ஜி, மீதா வசிஷ்ட், ஜதின் சர்னா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><h2>ஓடிடி ரிலீஸ் </h2><p>இந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்</title><link>https://www.dailythanthi.com/devotional/aavani-festival-begins-at-swamithoppu-ayya-vaikundar-thalaimai-pathi</link><comments>https://www.dailythanthi.com/devotional/aavani-festival-begins-at-swamithoppu-ayya-vaikundar-thalaimai-pathi#comments</comments><guid isPermaLink="false">53ace31f-d308-4922-a625-a08ee4f036fa</guid><pubDate>Fri, 21 Aug 2026 08:05:23 +0000</pubDate><atom:updated>2026-08-21T08:05:23.762Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிகச் செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514969</atom:uri></atom:author><description></description><media:keywords>Aanmigam,Devotional,ஆன்மிகம்,ayya vaikundar,ஆவணி திருவிழா,அய்யா வைகுண்டர்,swamithoppu,சாமிதோப்பு</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/dv0qukk4/Swamithoppu.jpg" width="752"><media:title type="html"><![CDATA[ ஆவணி திருவிழா கொடியேற்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/dv0qukk4/Swamithoppu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (Devotional)</category><content:encoded><![CDATA[ <p>தென்தாமரைக்குளம்,</p><p>சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.</p><p>கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு  அய்யா வைகுண்டர் தலைமை பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">ஆவணித் திருவிழா</a> இன்று  வெள்ளிக்கிழமை (21-ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், காலை  6.30 மணிக்கு  கொடியேற்றம் நிகழ்ச்சியும்  நடந்தது. </p><p>தலைமைபதி  தலைமை குரு பால.பிரஜாபதி அடிகளார் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். குரு பால. லோகாதிபதி, குரு.பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பணிவிடையும்,  தர்மங்களும், வாகன பவனியும் நடைபெற்றது. </p><p>நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் பணிவிடையும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 31-ம் தேதி வரை 11 நாட்கள் விழா நடக்கிறது </p><h2>விழா நிகழ்ச்சிகள்</h2><p>நாளை சனிக்கிழமை 22-ம் தேதி மாலையில் <a href="https://www.dailythanthi.com/topic/அய்யா-வைகுண்டர்">அய்யா</a> மயில் வாகனத்தில் பவனி வருதல், மூன்றாம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை 23-ம் தேதி இரவு அய்யா அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வருதல், 24-ம் தேதி அய்யா பூஞ்சப்பர  வாகனத்தில் வலம் வருதல், 25-ம் தேதி அய்யா பச்சைசாற்றி சப்பர வாகனத்தில் பவனி வருதல், 26-ம் தேதி அய்யா சர்ப்ப வாகனத்தில் பவனி வருதல் , 27-ம் தேதி அய்யா கருட வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.</p><p>8-ம் திருநாளான 28-ம்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றின் கரையில் கலி வேட்டையாடுதல் நிகழ்வு நடக்கிறது, தொடர்ந்து பல கிராமங்களுக்கு அய்யா  குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் <a href="https://www.dailythanthi.com/topic/அய்யா-வைகுண்டர்">அய்யா தவக்கோலத்தில் காட்சி</a> தரும் நிகழ்வும், தொடர்ந்து அன்னதர்மமும் நடக்கிறது.</p><p>29-ம்  தேதி அய்யா அனுமன் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதலும், 30-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அய்யா  இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி பவனிவரும் நிகழ்சியும் நடக்கிறது.</p><h2>தேரோட்டம்</h2><p>11-ம் திருநாளான 31-ம் தேதி திங்களன்று நண்பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கில் புறப்பட்டு பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தேரோட்டம்</a> நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து  கொடியிறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதன்பின் பக்தர்கள் அய்யாவிடம் இனிமம் பெற்று செல்கின்றனர். </p><p>திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனியும் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை  தலைமை பதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமான பொருட்கள் கொண்டுசெல்ல கட்டுப்பாடு: கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் பரிசீலனை</title><link>https://www.dailythanthi.com/news/india/restrictions-on-transporting-construction-materials-chief-minister-vijayan-considering-granting-an-exemption-to-kerala</link><comments>https://www.dailythanthi.com/news/india/restrictions-on-transporting-construction-materials-chief-minister-vijayan-considering-granting-an-exemption-to-kerala#comments</comments><guid isPermaLink="false">f552c6c6-8729-4409-a191-bfaaaf02c6a4</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:57:10 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:57:10.275Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Tamilnadu,தமிழ்நாடு,விஜய்,தமிழகம்,கேரளா,Kerala,construction materials,கட்டுமான பொருட்கள்,Tamilnadu ​,கட்டுப்பாடு,கேரளம்,keralam,முதல்-அமைச்சர் விஜய்,வி.டி.சதீசன்,V.D.Satheesan</media:keywords><media:content height="450" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/gun6hto4/kannai.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/gun6hto4/kannai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தேசிய செய்திகள் (National News)</category><content:encoded><![CDATA[ <p>திருவனந்தபுரம், </p><p>மற்ற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் (கற்கள்/ஜல்லி உள்ளிட்டவை) கொண்டு செல்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளிலிருந்து கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து தங்கள் அரசு பரிசீலிக்கும் என்று கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசனிடம், தமிழக <a href="https://www.dailythanthi.com/topic/vijay">முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்</a> உறுதியளித்ததாக கேரள முதல்-மந்திரியின் அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தது.</p><h2>மறுபரிசீலனை</h2><p>மாமல்லபுரத்தில் நடைபெற்ற தெற்கு மண்டலக் குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போது சதீசன் இந்த விவகாரத்தை எழுப்பியதாக அந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கேரளாவின் சிறப்பு சூழலைக் கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு சதீசன் கோரிக்கை விடுத்தார் என்றும், இது தொடர்பாக மேலும் விவாதித்து விரைவில் தகுந்த முடிவை எடுக்க இரு முதல்-அமைச்சர்களும் எடுக்க ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. </p><h2>விஜய்க்கு கடிதம்</h2><p>முன்னதாக, இக்கட்டுப்பாடுகளிலிருந்து கேரளாவுக்கு விலக்கு கோரி சதீசன், விஜய்க்கு எழுதி இருந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது:- </p><p>தமிழகத்​தில் இருந்து ஜல்​லிக் கற்​கள் உட்பட கட்​டு​மானப் பொருட்​களை வெளி மாநிலங்​களுக்கு கொண்டு செல்ல கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்ட தகவலை அறிந்​தேன். இந்த நடவடிக்​கை​யால் திருநெல்​வேலி, தென்​காசி, கன்​னி​யாகுமரி ஆகிய மாவட்​டங்​களில் இருந்து கேரளா​வுக்கு கட்​டு​மானக் கற்​கள் வரு​வது பெரு​மளவு பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கேரளா​வில் நடை​பெறும் தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​கள், தமிழகத்​தில் இருந்து கொண்டு வரப்​படும் கற்​களை நம்​பியே இருக்​கின்​றன.</p><p>எனவே, தற்​போதைய தடை​யால் கேரளா​வில் நடை​பெற்​று​வரும் பல தேசிய நெடுஞ்​சாலைத் திட்​டங்​களின் கட்​டு​மானப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டு, அவை தாமதமடை​யும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தத் திட்​டங்​கள் கேரளா​வுக்கு மட்​டுமின்​றி, ஒட்​டுமொத்த தென் மண்​டலத்​தின் பொருளா​தார வளர்ச்​சி, பிராந்​திய இணைப்​பு, சரக்கு போக்​கு​வரத்து மற்​றும் சுற்​றுலா மேம்​பாட்​டுக்​கும் முக்​கிய​மானவை.</p> <h2>கேரளா பாராட்​டு​கிறது</h2><p>குறிப்​பாக, விழிஞ்​சம் சர்​வ​தேச துறை​முகத்​தை​யும், வல்​லார்​பாடம் சர்​வ​தேச கண்​டெய்​னர் முனை​யத்​தை​யும் இணைக்​கும் தடையற்ற போக்​கு​வரத்​தின் மூலம் தென்​னிந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்​சி​யும் போட்​டித்​தன்​மை​யும் அதி​கரிக்​கும். இயற்கை வளங்​களை நிலை​யாகப் பாது​காக்​கும் தமிழக அரசின் கொள்கை நோக்​கங்​களை கேரளா பாராட்​டு​கிறது. </p><p>அதே​நேரம், தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களின் நியாய​மான தேவையைக் கருத்​தில்​கொண்டு ஒருசமநிலை​யான அணுகு​முறையை உரு​வாக்​கி​னால், உங்​கள் கொள்​கை​யிலும் பாதிப்​பும் ஏற்​ப​டா​மல் பார்த்​துக் கொள்​ளலாம்.</p><p>எனவே, கேரளா​வில் நடை​பெறும் தேசிய நெடுஞ்​சாலை மற்​றும் முக்​கிய உள்​கட்​டமைப்​புப் பணி​களுக்கு பிரத்​யேக​மாகத் தேவைப்​படும் ஜல்​லிக் கற்​களை மட்​டும் தடை​யின்றி கொண்டு செல்​ல வசதி​யாக, உரிய தளர்வு அல்​லது சிறப்பு நடை​முறையை ஏற்​படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p>]]></content:encoded></item><item><title>40 வயதுக்கு மேல் இருப்பவர்களா நீங்கள்?... இதயத்திடம் அலட்சியம் வேண்டாம்..!</title><link>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/are-you-over-40-do-not-neglect-your-heart</link><comments>https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/are-you-over-40-do-not-neglect-your-heart#comments</comments><guid isPermaLink="false">056fd2d1-76d8-4dc5-b594-72bd35bc0c2e</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:42:32.778Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Special Articles,மாரடைப்பு,Heart attack,Heart,இதயம்,இதய நோய்,heart disease,இதய ஆரோக்கியம்,heart health</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/zw5tyiyz/CHENNAI-13.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/zw5tyiyz/CHENNAI-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சிறப்புக் கட்டுரைகள் (Sirappukatturaigal)</category><category>Trending</category><content:encoded><![CDATA[ <h2>சிறு சிறு தவறு...</h2><p>"நேற்றுவரை நன்றாகத்தான் இருந்தார்... இன்று திடீரென்று மாரடைப்பு!" என்ற செய்தியை நாம் அடிக்கடி கேட்கிறோம். குறிப்பாக 40 வயதுக்கு மேல் இருப்பவர்களிடம் இதய நோய்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம். ஆனால், ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாரடைப்பு திடீரென்று வருவதில்லை; அது பல ஆண்டுகளாக நாம் செய்த சிறு சிறு தவறுகளின் மொத்தக் கணக்குதான்.</p><p>காலை உணவைத் தவிர்ப்பது, எண்ணெயில் பொரித்த உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது, உடற்பயிற்சியே இல்லாமல் நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பது, புகைப்பிடித்தல், மது அருந்துதல், மனஅழுத்தம், தூக்கமின்மை, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால்... இவை அனைத்தும் சேர்ந்து இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களை மெதுவாக அடைக்க தொடங்குகின்றன. வெளியில் எந்த அறிகுறியும் தெரியாமல் உள்ளே பிரச்சினை வளர்கிறது. ஒருநாள் அந்த அடைப்பு முழுமையானால், அதுவே மாரடைப்பாக மாறுகிறது.</p><h2>40 வயதைக் கடந்த பிறகு...</h2><p>நல்ல செய்தி என்னவென்றால், இதயத்தைப் பாதுகாப்பது கடி னமான விஷயம் அல்ல. தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். வீட்டில் சமைத்த எளிய உணவைச் சாப்பிட வேண்டும். காய்கறி, பழம், கீரை ஆகியவற்றை அதிகப்படுத்தி, எண்ணெய், இனிப்பு, உப்பு ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புகைப்பிடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.</p><p>போதுமான தூக்கம் அவசியம். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதும் இதயத்திற்கு ஒரு சிறந்த மருந்து தான். 40 வயதைக் கடந்த பிறகு, ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றைப் பரிசோதித்துக் கொள்வது நல்ல பழக்கமாக இருக்க வேண்டும். "எனக்கு ஒன்றும் ஆகாது" என்ற நம்பிக்கையைவிட, "நான் என்னை பாதுகாத்துக்கொள்வேன்” என்ற விழிப்புணர்வே உயி ரைக் காப்பாற்றும்.</p>]]></content:encoded></item><item><title>ஏமன்: 16 இந்தியர்கள் உள்பட 20 பேருடன் சென்ற எண்ணெய் கப்பல் கடத்தல் 

</title><link>https://www.dailythanthi.com/news/world/yemen-20-crew-including-16-indians-oil-tanker-hijacked</link><comments>https://www.dailythanthi.com/news/world/yemen-20-crew-including-16-indians-oil-tanker-hijacked#comments</comments><guid isPermaLink="false">d7d76c1d-d387-416b-bda5-bdbae78427e4</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:42:03 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:42:03.809Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கச்சா எண்ணெய்,ஏமன்,Yemen,கப்பல்,oil ship</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/d15quq8y/0.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/d15quq8y/0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலக செய்திகள் (World News)</category><content:encoded><![CDATA[ <p>சனா,</p><p>அமெரிக்கா, <a href="https://www.dailythanthi.com/">ஈரான் </a>போரின் போது ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். மேலும், சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்களை சிறைபிடிக்கும் சம்பவங்களும் அரங்கேறின. அதேபோல், செங்கடல் வழியே செல்லும் கப்பல்களை கடற்கொள்ளையர்கள் கடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. </p><h2> கச்சா எண்ணெய் கப்பல் கடத்தல்</h2><p>இந்நிலையில், ஏமன் அருகே செங்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று எரிட்ரியா நாட்டுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் 16 இந்தியர்கள் உள்பட 20 மாலுமிகள் பயணித்தனர். </p><p>இந்நிலையில், ஏமனில் இருந்து 30 நாட்டிகல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற கச்சா எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் சிறைப்பிடித்துள்ளனர். 16 இந்தியர்கள் உள்பட 20 மாலுமிகளுடன் சென்ற கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏமன் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>முன்னதாக சோமாலியா அருகே 6 இந்தியர்கள் உள்பட 10 மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திய நிலையில் தற்போது 16 இந்தியர்களுடன் சென்ற மற்றொரு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. </p> ]]></content:encoded></item><item><title>அரசுப் பேருந்தில் மாணவர்கள் சேட்டை: பொதுமக்கள் அதிர்ச்சி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-unruly-behavior-on-government-bus-public-shocked</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/students-unruly-behavior-on-government-bus-public-shocked#comments</comments><guid isPermaLink="false">2794b654-af90-4b0a-bfc9-a49a0c0f7991</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:25:04 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:25:04.638Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>Government bus,கிருஷ்ணகிரி,மாணவர்கள்,social media,அரசுப்பேருந்து,public shock</media:keywords><media:content height="422" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v3xo6zm5/30.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ பேருந்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/v3xo6zm5/30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி,</p><p>ஓசூர் அருகே அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>படிக்கட்டில் தொங்கியபடி சாகசம்</h2><p><a href="https://www.dailythanthi.com/news/tamilnadu">கிருஷ்ணகிரி மாவட்டம்</a>, ஓசூர் அடுத்த அஞ்செட்டி தாலுகா பகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகள் மூலம் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை வழக்கம்போல் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றில், <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">பள்ளி மாணவர்கள்</a> சிலர் பேருந்தின் படியில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். </p><p>ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பேருந்தின் வெளிப்பகுதியில் சாகசம் செய்வது போல மாணவர்கள் நடந்து கொண்ட இந்த வீடியோ, பின்னால் வந்த வாகன ஓட்டிகளால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.</p><h2>பெற்றோர்கள்-பொதுமக்கள் அதிர்ச்சி</h2><p>சிறு விபத்து ஏற்பட்டாலும் மாணவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய இந்த செயலைக் கண்டு சக பயணிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். மாணவர்களின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.</p><h2>கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை</h2><p>கிராமப்புறப் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் போதிய எண்ணிக்கையில் <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">அரசுப் பேருந்துகள்</a> இயக்கப்படாததே இது போன்ற கூட்ட நெரிசலுக்கும் ஆபத்தான பயணங்களுக்கும் முக்கியக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள் மீது போக்குவரத்து போலீசாரும் பள்ளி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ </title><link>https://www.dailythanthi.com/cinema/cinemanews/lokesh-kanagarajs-dc-joins-the-100-crore-club</link><comments>https://www.dailythanthi.com/cinema/cinemanews/lokesh-kanagarajs-dc-joins-the-100-crore-club#comments</comments><guid isPermaLink="false">912dafab-f857-4c03-8055-4f107dcb5cca</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:22:20 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:22:20.218Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2514964</atom:uri></atom:author><description></description><media:keywords>லோகேஷ் கனகராஜ்,Lokesh Kanagaraj,வசூல்,அருண் மாதேஸ்வரன்,Wamiqa Gabbi,box office collection,Arun Matheswaran,டிசி</media:keywords><media:content height="423" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/2nkv9sb5/11.jpg" width="752"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/2nkv9sb5/11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema News)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை,</p><p>கடந்த 7ந் தேதி வெளியான <a href="https://www.dailythanthi.com/search?q=dc">டிசி</a> படம் 15 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் ‘டிசி’ திரைப்படமும் இணைந்துள்ளது. </p>  <h2>நடிகராக கவனம் ஈர்க்கும் லோகேஷ்</h2><p>இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள <a href="https://www.dailythanthi.com/search?q=lokesh-kanagaraj">லோகேஷ் கனகராஜ்</a>, தற்போது நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><h2>வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்</h2><p>‘மாநகரம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். சமீபத்தில் ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.</p>  <h2>கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் லோகேஷ்</h2><p>சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 7-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p> <h2>15 நாட்களில் ரூ.100 கோடி வசூல்</h2><p>இந்த நிலையில், ‘டிசி’ திரைப்படம் 15 நாட்களில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் ‘டிசி’ திரைப்படமும் இணைந்துள்ளது. அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், ‘டிசி’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Massive Blockbuster <a href="https://x.com/hashtag/DC?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DC</a> <a href="https://x.com/Dir_Lokesh?ref_src=twsrc%5Etfw">@Dir_Lokesh</a> <a href="https://x.com/ArunMatheswaran?ref_src=twsrc%5Etfw">@ArunMatheswaran</a> <a href="https://x.com/anirudhofficial?ref_src=twsrc%5Etfw">@anirudhofficial</a> <a href="https://x.com/hashtag/WamiqaGabbi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WamiqaGabbi</a> <a href="https://x.com/isanjkayy?ref_src=twsrc%5Etfw">@isanjkayy</a> <a href="https://x.com/mukesh_DOP?ref_src=twsrc%5Etfw">@mukesh_DOP</a> <a href="https://x.com/editor_prasanna?ref_src=twsrc%5Etfw">@editor_prasanna</a> <a href="https://x.com/skannanartdir?ref_src=twsrc%5Etfw">@skannanartdir</a> <a href="https://x.com/PC_stunts?ref_src=twsrc%5Etfw">@PC_stunts</a> <a href="https://x.com/kabilanchelliah?ref_src=twsrc%5Etfw">@kabilanchelliah</a> <a href="https://x.com/kuchirayar73?ref_src=twsrc%5Etfw">@kuchirayar73</a> <a href="https://x.com/RIAZtheboss?ref_src=twsrc%5Etfw">@RIAZtheboss</a> <a href="https://t.co/L1kiEqdINr">pic.twitter.com/L1kiEqdINr</a></p>&mdash; Sun Pictures (@sunpictures) <a href="https://x.com/sunpictures/status/2090685001524560034?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் மாயமான 7 ஆந்திர மீனவர்கள்... தேடுதல் பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-andhra-fishermen-missing-in-the-bay-of-bengal-search-operations-should-be-intensified-anbumani</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/7-andhra-fishermen-missing-in-the-bay-of-bengal-search-operations-should-be-intensified-anbumani#comments</comments><guid isPermaLink="false">9781bd4d-eb6f-4df8-84a8-d7fd2e1045c8</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:21:12 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:21:12.446Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,அன்புமணி,Anbumani,fishermen,Bay of Bengal,வங்கக்கடல்,தேடுதல் பணி</media:keywords><media:content height="450" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z345kajd/anbumani.jpg" width="750"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/z345kajd/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை,</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.dailythanthi.com/topic/anbumani-ramadoss">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் ஒடலரேவு கடற்கரையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3-ஆம்  தேதி வங்கக்கடலுக்கு சூறை மீன்பிடிப்புக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போய், 14 நாள்களாகும் நிலையில், இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணிகளைத்  தீவிரப்படுத்த வேண்டிய நிலையில், தேடும் பணிகள் கைவிடப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.</p><h2>மீனவர்கள் மாயம்</h2><p>ஒடலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஓடலரேவு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சூறை மீன்பிடிக்கச் சென்றனர். கர்ரி ராமுடு, கே ராமகிருஷ்ணா, எஸ் தாத்தாராவ், ஏசுதாசு, பலேபு சாந்தராவ், கொல்லட்டி ஸ்ரீனிவாஸ், சதீஷ் ஆகிய 7 மீனவர்களும் கடந்த 10 அல்லது 11-ஆம் தேதி துறைமுகம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், கடைசியாக கடந்த 7-ஆம் தேதி குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட அவர்களை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் படகு  ஒதிஷா அல்லது மேற்கு வங்காள கடல்பகுதிக்கு காற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.</p><p>காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள், விமானப் படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. அவர்கள் காணாமல் போனதாக கருதப்படும் பகுதியில் இருந்து 300 கடல் மைல் சுற்றளவில்  தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஒதிஷா மாநிலம் பாரதீப் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது. ஒதிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளன.</p><h2>தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு</h2><p>கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் வேட்டையை குறை சொல்ல முடியாது. ஆனால், இரு வாரங்களாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், இன்னும் ஓரிரு நாள்களில் தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களிடம் 1000 லிட்டர் டீசலும், 20 நாள்களுக்குத் தேவையான உணவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான காற்று காரணமாக அவர்கள் வெகு தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>மீனவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம்</h2><p>அதனால், தேடுதல் தொலைவை சற்று அதிகரித்து பணிகளை தீவிரப்படுத்தினால், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து விடலாம். காணாமல் போன மீனவர்களில் மூவருக்குக் நீச்சல் கூட தெரியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தேடும் பணிகள் கைவிடப்பட்டால், இதுநாள் வரை மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் வீணாகி விடும். எனவே, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திர அரசையும், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளை  கேட்டுக் கொள்கிறேன். காணால் போன மீனவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவு, நிதி ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் அருகே குடியிருப்பில் குளம்போல் தேங்கிய கழிவுநீர் அகற்றம்</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/disposal-of-stagnant-sewage-in-a-residence-near-tirupur</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/disposal-of-stagnant-sewage-in-a-residence-near-tirupur#comments</comments><guid isPermaLink="false">4ebe1b98-8e79-419c-9dc9-6ba6b5f66ee1</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:20:16 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:20:16.728Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,திருப்பூர்,sewage,கழிவுநீர்</media:keywords><media:content height="432" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/y2hl9nx7/12.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/y2hl9nx7/12.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர், </p><p>திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையம் கிழக்கு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்கேயே குளம்போல் தேங்கி நின்றது. உரிய திட்டமிடல் இல்லாமல் கால்வாய் கட்டப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். </p><p>இது குறித்து ‘தினத்தந்தி’ யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கரைப்புதூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குளம் போல் தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றப்பட்டது. இதையடுத்து மக்கள் பிரச்சினைகளை செய்தியாக வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>கொச்சி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பெயரை மாற்ற அரசுக்கு பரிந்துரை </title><link>https://www.dailythanthi.com/news/india/proposal-to-rename-kochi-metro-rail-limited-submitted-to-the-government</link><comments>https://www.dailythanthi.com/news/india/proposal-to-rename-kochi-metro-rail-limited-submitted-to-the-government#comments</comments><guid isPermaLink="false">acc9034d-b8d1-4d20-8bfa-8e905a5fdd09</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:43:07 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:43:07.434Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2403227</atom:uri></atom:author><description></description><media:keywords>கேரளா,Kerala Government,Kochi,மெட்ரோ,Metro Rail Station,பரிந்துரை</media:keywords><media:content height="422" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/q9dm6pw0/29.jpg" width="753"><media:title type="html"><![CDATA[ கொச்சி மெட்ரோ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ கேரளம் மெட்ரோ ரெயில் லிமிடெட் என மாற்ற அரசுக்கு பரிந்துரை.]]></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/q9dm6pw0/29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தேசிய செய்திகள் (National News)</category><content:encoded><![CDATA[ <p>திருவனந்தபுரம்,</p><p>கொச்சி <a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B">மெட்ரோ </a>ரெயில் லிமிடெட் நிறுவனத்தின் பெயரை 'கேரளம் மெட்ரோ ரெயில் லிமிடெட்' என மாற்றக் கோரி கேரள அரசுக்கு அதன் மேலாண் இயக்குநர் லோநாத் பெஹரா பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.</p><h2>பெயர் மாற்றத்திற்கான காரணங்கள்</h2><p>கொச்சி மெட்ரோ நிறுவனம் தற்போது கொச்சி நகரைத் தாண்டி திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய நகரங்களிலும் மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறது. மேலும், கொச்சி வாட்டர் மெட்ரோ மற்றும் மின்சார வாகனப் போக்குவரத்து போன்ற திட்டங்களையும் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.</p><p>எனவே, ஒரு குறிப்பிட்ட நகரத்தின் பெயரை மட்டும் கொண்டிருக்காமல், மாநிலம் தழுவிய ஒட்டுமொத்தப் போக்குவரத்துப் பணியைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் அவசியம் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பிற மாநிலங்களில் உள்ள மெட்ரோ நிறுவனங்கள், அந்தந்த மாநிலங்களின் பெயர்களில் மாற்றப்பட்ட முன்மாதிரியைப் பின்பற்றியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அடுத்தகட்ட நடைமுறைகள்</h2><p>இந்தப் பெயர் மாற்றத்தால் நிறுவனத்தின் சொத்துகள், ஒப்பந்தங்கள் அல்லது ஊழியர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதற்கான பிராண்டிங் செலவுகள் அனைத்தையும் நிறுவனமே ஏற்கும். கேரள மாநில அரசு இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, பங்குதாரர்கள் மற்றும் மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் இறுதி அனுமதியுடன் இந்தப் பெயர் மாற்றம் அமலுக்கு வரும்.</p><h2>எதிர்ப்பு கிளம்பியது</h2><p>இதற்கிடையில், இந்த மாற்றத்திற்கு எர்ணாகுளம் எம்பி ஹைபி ஈடன் மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கொச்சி மெட்ரோவின் தற்போதைய பிராண்ட் அடையாளத்தைப் பாதிக்காமல் பிற நகரங்களில் சேவைகளை விரிவுபடுத்த முடியும் என்பதால், பெயர் மாற்றத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அவர்கள்<a href="https://www.dailythanthi.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D"> </a>முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>’ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்.. மிரட்டல்களுக்கு திமுக பயப்படாது&apos; - உதயநிதி பேச்சு</title><link>https://www.dailythanthi.com/news/tamilnadu/take-action-if-there-is-evidence-the-dmk-will-not-be-intimidated-by-threats-says-udhayanidhi</link><comments>https://www.dailythanthi.com/news/tamilnadu/take-action-if-there-is-evidence-the-dmk-will-not-be-intimidated-by-threats-says-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">35e56cbd-ef28-4b6e-9624-b8321b97b8e6</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:14:17.846Z</atom:updated><atom:author><atom:name>தினத்தந்தி</atom:name><atom:uri>/api/author/2401540</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சட்டசபை,Legislative Assembly</media:keywords><media:content height="432" url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xluta68q/9.gif" width="768"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://media.assettype.com/dailythanthi/2026-08-21/xluta68q/9.gif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, </p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது;</p><h2>ஜோதிடர் சொல்ல வேண்டுமா?</h2><p>தனது டேபிளில் பைல் இருப்பதாகவும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்றும் முதல்வர் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? நடவடிக்கை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம். </p><h2>சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி</h2><p>ஆளுங்கட்சியினர் எங்களுக்கு பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். சட்டமன்றத்தில் பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா அல்லது சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. </p><p>நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் கருத்துகள் ரீல்ஸ்சாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. நான் பேசியதை நீக்கிவிட்டீர்கள். ஆனால் அது சமூக வலைதளங்களில் வெளியாகிறது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது என்பதை குறிப்பிடுகிறேன்.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p> ]]></content:encoded></item></channel></rss>