பிரபல டைரக்டர் மீது பாலியல் புகார்


பிரபல டைரக்டர் மீது பாலியல் புகார்
x
தினத்தந்தி 7 Feb 2022 9:35 AM GMT (Updated: 7 Feb 2022 9:35 AM GMT)

பிரபல டைரக்டர் மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள டைரக்டர் பாலச்சந்திர குமார். இவர் மீது கண்ணூரை சேர்ந்த இளம்பெண் கொச்சி போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘’எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக பாலச்சந்திர குமார் உறுதி அளித்தார். பின்னர் என்னை எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வரும்படி அழைத்தார். நான் அந்த ஓட்டலுக்கு சென்றதும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை வீடியோவாகவும் எடுத்துக்கொண்டார். அந்த வீடியோவை வைத்து என்னை தொடர்ந்து மிரட்டினார். 10 வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது’’ என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பாலசந்திரகுமார் சமீபத்தில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் பாலியல் தொல்லைக்கு உள்ளான நடிகையின் வீடியோவை பார்த்தார் என்றும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய முயற்சி செய்தார் என்றும் பரபரப்பு புகார் கூறினார். இந்த புகாரில் திலீப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாலச்சந்திரகுமார் மீது பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story