சென்னை விமான நிலையத்தில் ரூ.68 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.68 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Dec 2021 10:06 AM GMT (Updated: 24 Dec 2021 10:06 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.67 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 550 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கை விமானம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது 6 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இ்ல்லை.

ரூ.68 லட்சம் தங்கம் பறிமுதல்

இதையடுத்து 6 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள், தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

6 பேரிடம் இருந்தும் ரூ.67 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 550 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரையும் கைது செய்து, அந்த தங்கத்தை யாருக்காக இலங்கையில் இருந்து கடத்தி வந்தனர்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story