சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு


சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 27 Dec 2021 9:24 AM GMT (Updated: 27 Dec 2021 9:24 AM GMT)

என்ஜினீயர் வீட்டில் பீரோவை உடைத்து அதில் வைத்து இருந்த 25 பவுன் தங்க நகையை திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது.

சென்னை மயிலாப்பூர் கன்னிலால் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் விழுப்புரம் சென்று விட்டார். நேற்று சார்லசின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். இதுகுறித்து தகவல் தெரிந்து, சார்லசின் உறவினர்கள் வந்து பார்த்தனர். 

அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவை உடைத்து அதில் வைத்து இருந்த 25 பவுன் தங்க நகையை திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story