10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2022 10:19 AM GMT (Updated: 7 Feb 2022 10:19 AM GMT)

10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

10-ம் வகுப்பு மாணவி

சென்னை மதுரவாயல், காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் பானு (வயது 15). இவர், மதுரவாயலில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பானு, தனது தாயாரிடம் கூட பேசாமல் நேராக தனது அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார்.

நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாயார், வெகுநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

அங்கு பானு, மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், பானு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி பானுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story