முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது


முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 March 2022 10:21 AM GMT (Updated: 3 March 2022 10:21 AM GMT)

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், மூங்கில் ஏரியை சேர்ந்தவர் சரண்யா(வயது 30). இவர், சில நாட்களுக்கு முன்பு சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், “நான், வினோத்(30) என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டேன். எங்களுக்கு 7 வயதில் சாய்ஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் 3 ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வருகிறோம். எனது கணவர் வினோத், எனக்கு தெரியாமல், பெங்களூருவை சேர்ந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்து கொண்டதாக வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story