மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 March 2022 10:07 AM GMT (Updated: 6 March 2022 10:07 AM GMT)

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சென்னை நெற்குன்றம், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மங்கல் சிங் (வயது 20). இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் அவரது நண்பரான விஸ்வா(23) அமர்ந்து இருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெற்குன்றம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையை கடந்து செல்ல முயன்ற 2 பெண்கள் மீது இவரது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மங்கல் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அவரது நண்பர் விஸ்வா மற்றும் 2 பெண்கள் ஆகிய 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் படுகாயம் அடைந்த பெண்கள் இருவரும் நெற்குன்றம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏஞ்சல் (57) மற்றும் அவருடைய மகள் செரீன் (20) என்பதும், அமைந்தகரை போக்குவரத்து போலீஸ்காரர் தேவராஜ் என்பவருடைய மனைவி, மகள் என்பதும் தெரியவந்தது.


Next Story