டெல்லியில் வரலாறு கானாத வெப்பநிலையால் மக்கள் கடும் அவதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 May 2022 10:26 AM GMT (Updated: 16 May 2022 10:26 AM GMT)

தலைநகர் டெல்லியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

கோடைகாலம் தொடங்கியது முதல் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்கேஷ்பூர் பகுதியில் வெயிலின் அளவு 120.56 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. நஜாப்கார் பகுதியில் 120.38 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.

இந்த கடுமையான வெயில் காரணமாக டெல்லி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், வீட்டிலேயே தங்கி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் பண்டல்சந்த் பகுதியில் 120.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் 115 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளன.

வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கானப்படுவதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


Next Story